சட்டென்று மாறுது வானிலை.. சென்னையில் சாரல் மழை.. 'ஜில் ஜில்' காற்றால் ஏசி ஸ்விட்ச் ஆன்!
சென்னையை புரட்டிப் போட்ட வடகிழக்குப் பருவமழை சற்று இடைவெளி விட்டுள்ள நிலையில் நகர் முழுவதும் ஜில் ஜில் காற்று வீசி வருகிறது.
Recommended Video

சென்னை : சென்னையில் கனமழையை கொட்டித் தீர்த்த வடகிழக்குப் பருவமழை கடந்த 2 நாட்களாக லீவு விட்டிருக்கும் நிலையில், நகர் முழுவதும் ஜில் ஜில் காற்றுடன் நகரின் சில பகுதிகளில் லேசான சாரலுமாக பெய்து வருகிறது.
வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 27ம் தேதி தொடங்கியதாக அறிவிக்கப்பட்டது. அன்று முதலே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர், நாகை மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. கடந்த வாரம் முழுவதும் கொட்டித் தீர்த்த கனமழையால் சென்னையின் புறநகர்ப் பகுதிகள் வெள்ளக்காடானது.

இந்நிலையில் திங்கட்கிழமை முதல் மழையின் அளவு படிப்படியாக குறைந்து கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் மழையின்றி வெயில் தலை காட்டி வருகிறது. உச்சி வேளையில் வெயில் சுள்ளென்று சுட்டெரித்தாலும், 3 மணிக்கு மேல் நகரின் பல பகுதிகளில் மேகம் சூழ்ந்து கொண்டு குளிர்ந்த காற்று வீசுகிறது. இதனால் சென்னைவாசிகள் சூடான பானங்கள், கரகர மொறு மொறு தின்பண்டங்களை நாடிச் செல்கின்றனர்.
இதனிடையே இன்று மாலையில் சென்னையின் கோடம்பாக்கம், சூளைமேடு, வேளச்சேரி, திநகர், தேனாம்பேட்டை உள்ளிட்ட நகரின் சில பகுதிகளில் சுமார் 10 நிமிடங்கள் லேசான சாரல் மழை பெய்தது. சென்னையில் ஞாயிற்றுக் கிழமை வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் திங்கள், செவ்வாய்கிழமைகளிலேயே மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மைய கணிப்புகள் கூறுகின்றன.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications