சென்னையிலேயே உயரமான மெட்ரோ ரயில் நிலையமாக உருவெடுக்கும் ‘அசோக் நகர்’ ஸ்டேஷன்!
சென்னை: சென்னையிலேயே மிக உயரமான மெட்ரோ ரயில் நிலையம் என்ற பெயரை அசோக் நகரில் அமையும் ரயில் நிலையம் பெறப் போகிறது. அசோக் நகரில் மிக உயரமான ஆறு அடுக்குகளைக் கொண்ட மெட்ரோ ரயில்வே நிலையம் அமைக்கப்படவுள்ளது.
இதில், பிளாட்பாரம் தவிர பிற அடுக்குகளை வர்த்தகப் பயன்பாட்டிற்கு விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகின்றன. அசோக் நகர் மெட்ரோ ரயில் நிலைய கட்டுமானப் பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இந்நிலையில், அக்கட்டிடத்தில் மேலும் நான்கு அடுக்குகளைச் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

40 அடி உயரம்...
இப்புதிய அடுக்குகளை வர்த்தக பயன்பாட்டிற்கு விடுவதன் மூலம் வருமானத்தைக் கூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, ஆறு அடுக்குகளைக் கொண்ட அசோக் நகர் மெட்ரோ ரயில் நிலையம் கட்டப்பட்டால் அதன் உயரம் 40 அடி இருக்கும் எனக் கூறப்படுகிறது.

உயரமான ரயில் நிலையம்...
மேலும், இதுவே சென்னையின் மிக உயரமான மெட்ரோ ரயில் நிலையம் என்ற சிறப்பைப் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

பார்க்கிங் ஏரியா...
மேலும், இந்த ரயில் நிலையத்தின் அருகிலேயே மிகப்பெரிய பார்க்கிங் ஏரியா கொண்டு வரப்பட உள்ளதாம். இதன் மூலம் ரயில் பயணிகள் மட்டுமின்றி மற்ற பொது மக்களும் பயன் பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

வர்த்தகப் பகுதிகள் அதிகம்...
அசோக் நகர், நகரின் முக்கிய பரபரப்பான இடம் என்பதாலும், வர்த்தகப் பகுதிகள் இதைச் சுற்றி அதிகம் இருப்பதாலும், இந்த ரயில்வே ஸ்டேஷன் ஆறு அடுக்குக்கொண்டதாக மாற்றப்படவுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுமானப் பணிகள்...
அதேபோல், கோயம்பேட்டிலிருந்து பரக்கி மலைக்கு இடைப்பட்ட எட்டு மெட்ரோ ரயில் நிலையங்களிலும் கட்டுமானப் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன.

சுரங்க ரயில் நிலையம்...
அதேபோல சுரங்க ரயில் நிலையங்களிலேயே சென்ட்ரல் சுரங்க மெட்ரோ ரயில் நிலையம் தான் மிகப் பெரியதாக உருவாக்கப்படுகிறது. இந்த ரயில் நிலையத்தில் எம்ஆர்டிஎஸ் மற்றும் சாதாரண மின்சார ரயில் இணைப்பும் சந்திக்கும் வகையில் மிகப் பெரியதாக இந்த மெட்ரோ சுரங்க நிலையம் அமைக்கப்படுகிறது.

வணிக நிறுவனங்கள்...
மேலும் சுரங்க ரயில் நிலையங்களில் அவற்றின் பரப்பளவை பொறுத்து வணிக நிறுவனங்களுக்கும் அதிக அளவில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
13 வயது சிறுமியை 15 பேர் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு.. விசாரணையை சென்னைக்கு மாற்ற தந்தை கோரிக்கை -
உரிமைத் தொகை ₹1000 பதில் 2000 தந்தால்? சென்னை டூ திருச்சி சிறுமி சம்பவத்தில் பொங்கிய டிடிவி தினகரன் -
LPG Shortage: சமையல் கேஸ் சிலிண்டர் புக் செய்ய முடியவில்லையா! இந்த App-ல் டிரை செய்து பாருங்க! -
கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்படும்.. தமிழக அரசு அதிரடி எச்சரிக்கை.. என்னாச்சு? -
சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம்.. லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா மாஸ்டர் பிளானில் சிக்கிய பரிதாப பெண்கள் -
சிலிண்டர் வரலை! ஆப்பம்லாம் பிறகு பார்ப்போம்! Variety rice கிடையாது! சென்னை ஆனந்தா ஹோட்டல் அறிவிப்பு -
சென்னை கிண்டி மேம்பாலத்தில் ஜொலித்த 1.5 கிலோ தங்கம்.. ஜிஎஸ்டி ஆபீசர் பின்னாடி போனால்? பெரிய ட்விஸ்ட் -
மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் திடீர்னு ஏறிய கரண்ட் தேவை! உடனே வந்த மின்வாரிய ஹேப்பி நியூஸ் -
IPL 2026: ஐபிஎல் 2026 கால அட்டவணை வெளியீடு.. சென்னை மேட்ச் எப்போது? தேதி வாரியாக முழு லிஸ்ட்! -
ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்.. சொல்ல சொல்ல ஆசிரியை எழுதிய விடை -
சென்னையில் புதிய அமெரிக்கத் துணைத் தூதராக மரியானா எல்.நெய்ஷுலர் பொறுப்பேற்பு -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை!












Click it and Unblock the Notifications