மிரட்டும் டெங்கு... மீள்வது எப்படி - ஒரு விழிப்புணர்வு வீடியோ
டெங்கு காய்ச்சல் வந்தால் அச்சம் வேண்டாம், முறையான மருத்துவம் செய்தால் மீண்டு விடலாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
சென்னை: டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கணிசமாக அதிகரித்து வருகிறதே தவிர, குறைந்தபாடில்லை. டெங்குவினால் ஏற்படும் மரணங்கள் மக்களை பீதிக்கு ஆளாக்கி வருகிறது.
டெங்கு பற்றிய பயமும் உயிரிழப்பும் முழுவதுமாகக் குறைவதற்கு அரசின் முயற்சி மட்டுமே போதாது. மக்களுக்கும் இந்த நோய் குறித்த விழிப்புஉணர்வு ஏற்பட வேண்டும்.
டெங்கு காய்ச்சல் எப்படி வருகிறது, தடுப்பு நடவடிக்கைகள் என்ன? என்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மருத்துவர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.
திடீரென கடுமையான காய்ச்சல் அதிகமான தலைவலி, கண்களுக்குப் பின்புறம் வலி, கண் விழி சிவந்து, வெளிச்சத்தைப் பார்க்க முடியாமல் கண் கூசுதல், உடலில் சிவப்புப் புள்ளிகளும் தோன்றுவது இந்த நோயின் அறிகுறியாகும். காய்ச்சல் பாதித்த காலத்தில் நோயாளி நன்றாக ஓய்வெடுக்க வேண்டும்.
சரியான விழிப்புணர்வு இருந்தால் நோயில் இருந்து தப்பிக்கலாம் என்பதே மருத்துவர்களின் அறிவுரையாகும்.