தமிழ் இலக்கிய நெஞ்சங்களை ஒட்டுமொத்தமாக வசீகரித்த பாலகுமாரன்!
மறைந்த பாலகுமாரன் தன்னுடைய 40 வருடங்களில் 300 புத்தகங்களை எழுதியவர்.
சென்னை: உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழின் பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். அவரை பற்றிய ஒரு சிறு குறிப்பு இதோ:
மறைந்த பாலகுமாரனின் சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள பழமார்நேரி என்னும் சிற்றூர் ஆகும். தமிழாசிரியருக்கு மகனாக பிறந்த பாலகுமாரன் 11-ம் வகுப்பு வரையே கல்வி பயின்றார்.
தட்டச்சும், சுருக்கெழுத்தும் கற்று தனியார் நிறுவனம் ஒன்றில் 1969-ம் ஆண்டு பணியாற்ற தொடங்கினார். தன்னுடைய 20 வயது முதலே கவிதைகளையும் எழுத தொடங்கினார். அவற்றில் சில கணையாழி இதழிலும் வெளிவந்தன.

20-வயதில் கவிஞரானார்
மறைந்த பாலகுமாரனின் சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள பழமார்நேரி என்னும் சிற்றூர் ஆகும். தமிழாசிரியருக்கு மகனாக பிறந்த பாலகுமாரன் 11-ம் வகுப்பு வரையே கல்வி பயின்றார். தட்டச்சும், சுருக்கெழுத்தும் கற்று தனியார் நிறுவனம் ஒன்றில் 1969-ம் ஆண்டு பணியாற்ற தொடங்கினார். தன்னுடைய 20 வயது முதலே கவிதைகளையும் எழுத தொடங்கினார். அவற்றில் சில கணையாழி இதழிலும் வெளிவந்தன.

திரைத்துறையில் பாலகுமாரன்
பின்னர் டிராக்டர் கம்பெனி ஒன்றில் உயரதியாக வேலை பார்த்தார் பாலகுமாரன். ஆனால் திரைத்துறையில் பணியாற்றுவதற்காக ஆசைப்பட்டு அந்த வேலையை தூக்கியெறிந்தார். இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் குழுவில் மூன்று திரைப்படங்களிலும், கே.பாக்யராஜ் குழுவில் இணைந்து சில படங்களிலும் உதவி இயக்குனராக பணியாற்றினார். கமலஹாசனின் நாயகன், ரஜினியின் பாட்ஷா, டைரக்டர் ஷங்கரின் ஜென்டில்மேன், காதலன், ஜீன்ஸ் உள்ளிட்ட 23 திரைப்படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதியுள்ளார். பின்னர் இது நம்ம ஆளு என்னும் திரைப்படத்தை கே.பாக்யராஜ் மேற்பார்வையில் இயக்கவும் செய்தார்.

பிரபலமான படைப்புகள்
எழுத்துச்சித்தர் பாலகுமாரன் 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 200-க்கும் மேற்பட்ட நெடுங்கதைகளையும், சில கவிதைகள், கட்டுரைகளையும் எழுதி உள்ளார். மொத்தமாக 40 ஆண்டுகளில் 300-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். இவரது மெர்க்குரி பூக்கள், இரும்புக்குதிரை, உடையார், தாயுமானவன் ஆகிய நாவல்கள் புகழ்பெற்றவை. இவரது கவிதைகள் இதயம்பேசுகிறது, குங்குமம், சாவி, ஆனந்தவிகடன் உள்ளிட்ட பல இதழ்களில் வெளிவந்திருக்கின்றன.

சாகித்ய அகாடமி விருது
இரும்புக்குதிரை என்ற அவரது நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர் பாலகுமாரன். கலைக்காக பாலகுமாரன் ஆற்றிய சேவைக்காக மாநில அரசு இவருக்கு கலைமாமணி வழங்கி கௌரவித்தது. அத்துடன் சுகஜீவனம் என்ற சிறுகதை தொகுப்புக்காக மாநில அரசின் விருதினையும், மெர்க்குரி பூக்கள் நாவலுக்காக இலக்கிய சிந்தனை விருதையும் பெற்றார். திரைத்துறையை பொறுத்தமட்டில், காதலன் திரைப்படத்துக்காக மாநில அரசின் சிறந்த வசனக்கர்த்தா விருதும் கிடைக்கப் பெற்றது.

பிரமாண்ட நாவல்
பாலகுமாரனின் எழுத்துலகில் முத்தாய்ப்பாக அமைந்தது, 'உடையார்' எனும் மிகப்பிரமாண்டமான நாவல்தான். இது, ராஜராஜ சோழனின் ஆட்சி செய்த காலகட்டத்தையும் குறிப்பாக தஞ்சை பெரிய கோயில் கட்ட எடுத்துக்கொண்ட முயற்சிகள் மற்றும் கட்டப்பட்ட விதம் ஆகியவற்றையும் கதைக்களமாகக் கொண்டது. இதற்காக பாலகுமாரன் பல ஆண்டுகள் ஆய்வுகளை மேற்கொண்டார். இந்த நாவலில், தஞ்சை பெரிய கோவில், தமிழராய்ப் பிறந்த அனைவரும் கொண்டாடும் ஒரு அற்புதமான சோழர் கால வரலாற்றுச் சான்று என்றும், அளப்பரிய பொறியியல் கருவிகளும் வளர்ச்சியும் இருந்திராத காலத்தில் மிகப்பெரிய, துல்லியமான கற்றளி எழுப்பப்பட்ட விதம் அனைவருக்கும் ஆச்சர்யமளிக்கும் விஷயமாகும் என்பதையும் வலியுறுத்தியிருப்பார். இது ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுத்தந்தது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications