காவிரி விவகாரம்.. மத்திய அரசின் மெளனப் போக்கு வருத்தமளிக்கிறது - பாரதிராஜா
சென்னை: உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்களும், தமிழக வாகனங்களுக்கு தீயிடும் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டும் வரும் கர்நாடக அரசியல் கட்சிகளுடன் தொடர்புடைய கர்நாடக அமைப்பினர் செய்யும் கொலைவெறித் தாக்குதல் மிகவும் கண்டனத்திற்குரியது என இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர்களின் மீது நடத்தப்படும் தாக்குதல்களின் மீதும், தமிழ்நாடு-கர்நாடக எல்லையில் கடந்த ஒரு வாரமாக நிலவிவரும் பதற்றத்தையும் பார்த்தும், மெளனத்தைக் கடைபிடிக்கும் மத்திய அரசின் போக்கு மிகவும் வருத்தமளிப்பதாக உள்ளது. மத்திய அரசு இதில் தலையிட்டு இந்த விவகாரத்தில் நிரந்தரமான முடிவை எட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அரசியல் தலைவர்கள் கட்சி சார்பற்று இந்த விவகாரத்தில் நல்ல முடிவை எட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். தமிழகத்திலேயே தமிழர்கள் சிறுபான்மையினர் ஆகியிருக்கிறார்களா என்னும் அச்சம் நிலவுகிறது. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்பும், வன்முறை கட்டுக்கடங்காமல் சென்று, கர்நாடகத்தில் தமிழர்கள் மிகவும் துயருற்றிருக்கிறார்கள்.
சுதந்திரப் போராட்டத்தில் மிக அதிகமாக பங்கெடுத்தவர்கள் தமிழர்கள். அத்தகைய தமிழர்களுக்கு உடனடியாக பாதுகாப்பு, மிக விரைவாக அளிக்கப்படவேண்டும். ஆஃப்பிரிக்காவில், காந்தியைக் கொல்ல சதி நடந்தபோது, ஒரு தமிழர் தனது நெஞ்சில் குண்டைத் தாங்கி காந்தியைக் காப்பாற்றினார். இன்னொரு ஜென்மம் இருந்தால், நான் தமிழனாக பிறக்கவேண்டும் என்று அந்நேரத்தில் பெருமையுடன் சொன்னவர் காந்தி.
சமீபத்தில், ஒன்றரை லட்சம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டு, நாம் சோகத்தில் மூழ்கியிருந்தபோது, மரம் வெட்டியதாக 20 தமிழர்கள் கொல்லப்பட்டபோதும், தமிழர்களை மட்டுமே குறிவைத்துத் தாக்கும் இந்த நாட்டில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோமோ என சந்தேகிக்க வேண்டியதாக உள்ளது.
500 வருடங்களுக்கு முன்பு இருந்த நிலையைப் போன்று, தமது பகுதியை தாமே ஆண்டுகொள்ளும் முடிவை தமிழ் இளைஞர்கள் எடுப்பதற்கு முன்பாக மத்திய அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய முடிவை எடுக்குமாறு வேண்டிக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications