தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தடைக்கு பாஜக காரணம் அல்ல... சொல்கிறார் வெங்கையா நாயுடு
ஜல்லிக்கட்டு தமிழகத்தின் பாரம்பரியம், ஜல்லிக்கட்டு தடைக்கு பா.ஜ.க காரணம் இல்லை என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
சென்னை: இந்தியா டுடே நடத்தும் இரண்டு நாள் மாநாடு சென்னையில் நேற்று தொடங்கியது. இன்றைய மாநாட்டில் 6 மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் , தொழிலதிபர்கள், கலையுலக பிரபலங்கள் பங்கேற்று உரையாற்றி வருகின்றனர்.
இந்தநிலையில் இந்த மாநாட்டில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் கலந்துரையாடலின் போது பல்வேறு கேள்விக்கள் கேட்கப்பட்டன. தமிழகத்தில் இன்றைய சூழ்நிலையில் பாஜகவின் நிலைப்பாடு பற்றி கேட்கப்பட்டது.

தமிழர்கள் புத்திசாலிகள்
ஜல்லிக்கட்டு பிரச்சினை, தமிழகத்தில் பாஜக காலூன்ற நினைக்கிறதா? என்பன உள்ளிட்ட பல கேள்விகள் எழுப்பட்டன. இதற்கு பதிலளித்த வெங்கையா நாயுடு, தமிழர்கள் புத்திசாலித்தனமானவர்கள் என்று கூறினார்.

பாஜக காரணமல்ல
ஜல்லிக்கட்டு தடைக்கு பாஜக காரணமல்ல , இது தொடர்பாக நீதிமன்றத்தின் தலையீடு இருப்பதால் கருத்து கூற இயலாது என்றார். தொடர்ந்து பேசிய அவர், ஜல்லிக்கட்டு என்பது தமிழக பராம்பரியம் என்பது என்னுடைய தனிக்கருத்து. இது குறித்து மத்திய அரசு என்ன செய்ய இருக்கிறது என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்றும் கூறினார்.

தமிழகத்தில் வெற்றிடம்
தமிழகத்தில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அடுத்த தேர்தலில் அந்த வெற்றிடத்தை பாஜக நிரப்பும் என்றார். மத்திய அரசு என்றைக்கும் தமிழக அரசின் நண்பன்தான். தமிழகம் வளர்ச்சி பெறும் மாநிலமாக உள்ளது. முதல்வர் பன்னீர் செல்வத்திடம் மத்திய அரசு மாநிலத்திற்கு தேவையான உதவியை செய்ய தயாராக இருப்பதாக பிரதமர் மோடி ஏற்கெனவே கூறி இருந்தார் அதே போல தேவையான உதவிகளையும் மத்திய அரசு செய்து வருகிறது.

உட்கட்சி விவகாரம்
ஓ.பன்னீர் செல்வம் தற்போது முதல்வராக இருக்கிறார். இவர் தேர்தெடுக்கப்பட்ட முதல்வர். ஜெயலலிதா இருந்த போதே அவர் முதல்வராக பணியாற்றியுள்ளார். சசிகலாவைப் பற்றியும், அவர் எப்படி செயல்படுவார் என்பது பற்றியும் தெரியாது. முதல்வராக யார் இருப்பார்கள் என்பது அதிமுகவின் உள்கட்சி விவகாரம். அதில் என்றைக்கும் பாஜக தலையிடாது என்றும் வெங்கையா நாயுடு கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications