காணாமல்போன பாம்பன் மீனவர் உடல் இலங்கையில் கரை ஒதுங்கியது!
ராமேஸ்வரம்: காணாமல்போன பாம்பன் மீனவர் உடல் இலங்கையில் கரை ஒதுங்கி உள்ளது. அவரது உடலை மீட்க அரசுக்கு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த மாதம் 25 ஆம் தேதி பாம்பனை சேர்ந்த ஜான் கென்னடி என்பவரது படகில், ஜான் கென்னடி அவருடைய மகன் வில்சன் மற்றும் எஸ்ரோன், டெரிக் ஆகிய 4 பேரும் மீன்பிடிக்க சென்றனர்.
மண்டபம் கோயில்வாடி கடற்கரை பகுதியிலிருந்து மீன்பிடிக்க சென்ற இவர்கள், மறுநாள் கரை திரும்பி இருக்க வேண்டும். ஆனால் அன்று மாலை வரை அவர்கள் கரை திரும்பாததால், காணாமல் போன மீனவர்களை தேடி மாற்று படகுகளில் கடலுக்கு மீனவர்கள் சென்றனர்.
இரு நாட்களுக்கு பிறகு கடலில் மிதந்து கொண்டிருந்த ஜான் கென்னடி உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், மற்ற மூன்று மீனவர்களின் கதி என்னவென்று தெரியாமல் இருந்தது. இதையடுத்து, காணாமல் போன மீனவர்களை மீட்டுத்தர கோரி பாம்பனில் மீனவர்களின் உறவினர்கள் தொடர் உண்ணாவிரதம் உட்பட பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
இந்நிலையில், 17 நாட்களுக்கு பின்னர் காணாமல் போன மீனவர் எஸ்ரோன் உடல் இலங்கை யாழ்ப்பாணம் அருகே உள்ள ஊர்காவல்துறை கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையடுத்து, யாழ்ப்பாணம் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள எஸ்ரோவின் உடலை மீட்டுத்தர கோரி அவரது உறவினர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இவர் தவிர மற்ற இரண்டு மீனவர்களின் கதி என்னவென்று தெரியவில்லை.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications