காணாமல்போன பாம்பன் மீனவர் உடல் இலங்கையில் கரை ஒதுங்கியது!
ராமேஸ்வரம்: காணாமல்போன பாம்பன் மீனவர் உடல் இலங்கையில் கரை ஒதுங்கி உள்ளது. அவரது உடலை மீட்க அரசுக்கு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த மாதம் 25 ஆம் தேதி பாம்பனை சேர்ந்த ஜான் கென்னடி என்பவரது படகில், ஜான் கென்னடி அவருடைய மகன் வில்சன் மற்றும் எஸ்ரோன், டெரிக் ஆகிய 4 பேரும் மீன்பிடிக்க சென்றனர்.
மண்டபம் கோயில்வாடி கடற்கரை பகுதியிலிருந்து மீன்பிடிக்க சென்ற இவர்கள், மறுநாள் கரை திரும்பி இருக்க வேண்டும். ஆனால் அன்று மாலை வரை அவர்கள் கரை திரும்பாததால், காணாமல் போன மீனவர்களை தேடி மாற்று படகுகளில் கடலுக்கு மீனவர்கள் சென்றனர்.
இரு நாட்களுக்கு பிறகு கடலில் மிதந்து கொண்டிருந்த ஜான் கென்னடி உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், மற்ற மூன்று மீனவர்களின் கதி என்னவென்று தெரியாமல் இருந்தது. இதையடுத்து, காணாமல் போன மீனவர்களை மீட்டுத்தர கோரி பாம்பனில் மீனவர்களின் உறவினர்கள் தொடர் உண்ணாவிரதம் உட்பட பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
இந்நிலையில், 17 நாட்களுக்கு பின்னர் காணாமல் போன மீனவர் எஸ்ரோன் உடல் இலங்கை யாழ்ப்பாணம் அருகே உள்ள ஊர்காவல்துறை கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையடுத்து, யாழ்ப்பாணம் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள எஸ்ரோவின் உடலை மீட்டுத்தர கோரி அவரது உறவினர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இவர் தவிர மற்ற இரண்டு மீனவர்களின் கதி என்னவென்று தெரியவில்லை.
-
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
"FCRA சட்டத்திருத்தம் குரூரமானது.. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை முடக்க முயற்சி" - திமுக எம்.பி வில்சன் -
திருப்பூரில் அடியோடு மாறப்போகும் பின்னலாடை நிறுவனங்கள்.. ஏற்றுமதியாளர்கள் எடுத்த அதிரடி முடிவு -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள்












Click it and Unblock the Notifications