தமிழர் கொல்லப்பட்டதால் ஏற்பட்ட பதட்டம் தணிந்தது.. கர்நாடக எல்லையில் போக்குவரத்து தொடக்கம்

இதையடுத்து தற்போது கொளத்தூர் வழியாக கர்நாடக மாநிலத்தில் உள்ள மாதேஸ்வரன் மலைக்கு பஸ் போக்குவரத்துத் தொடங்கியுள்ளது.
கொளத்தூரை அடுத்த கோவிந்தபாடி கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி, ராஜா ஆகியோருடன் பழனி கடந்த 5 நாட்களுக்கு முன்பு இருமாநில எல்லைப்பகுதியில் மீன்பிடிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த கர்நாடக மாநில வனத்துறையினர் பால்ரஸ் குண்டுகளைக் கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மூவரும் காயமடைந்தனர்.
அவர்களில் முத்துசாமி, ராஜா ஆகியோர் தப்பி வந்துவிட்ட போதிலும், பழனியை மட்டும் காணவில்லை. அவரை தேடிவந்த அப்பகுதி மக்கள், கர்நாடக எல்லையில் உள்ள அடிப்பாலாறு பகுதியில் காவிரி ஆற்றில் உருக்குலைந்த நிலையில் பழனியின் உடலை கண்டெடுத்துள்ளனர்.
பழனியின் இடது கை வெட்டப்பட்டும், பிறப்புறுப்பு துண்டிக்கப்பட்டும் இருந்ததுடன், தலையில் வெட்டுக்காயங்களும், மார்பில் குண்டு பாய்ந்த காயங்களும் காணப்பட்டன. கர்நாடக வனத்துறையினர் பழனியை பிடித்து சித்திரவதை செய்து, கடைசியில் சுட்டுக்கொன்றுவிட்டனர் என்று தெரியவந்திருக்கிறது.
இந்தக் கொடூரக் கொலைச் சம்பவம் எல்லைப் பகுதி தமிழக மக்களை கொதிப்புக்குள்ளாக்கியுள்ளது. உடனடியாக எல்லையில் திரண்டு போராட்டம் நடத்தப்பட்டது. கர்நாடக சோதனைச் சாவடி தீவைத்துக் கொளுத்தப்பட்டது.
இந்த சம்பவம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இரு பக்கத்திலிருந்தும் அரசு பஸ்கள், தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. கடந்த 3 நாட்களாக அப்பகுதியில் பதட்டம் நீடித்து வந்தது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்குப்பிறகு பதட்டம் தணிந்தது. மேட்டூரில் இருந்து கொளத்தூர் வழியாக கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலைக்கு தமிழக அரசு போக்குவரத்துக்கழக பஸ் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தனியார் பஸ்களும் போக ஆரம்பித்துள்ளன.
-
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications