பெரியார் ஒன்றும் கடவுள் இல்லை; ஒரு மனிதர்- சி.பி.ராதாகிருஷ்ணன்
பெரியார் ஒன்றும் கடவுள் இல்லை என்றும் அவர் மனிதர் என்றும் சிபி ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
Recommended Video

சென்னை: பெரியார் ஒன்றும் கடவுள் இல்லை., அவர் ஒரு மனிதர்தான் என்றும் தேசிய கயிறு வாரிய தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள பெரியார் சிலைகள் உடைத்தெடுக்கப்படும் என்று எச் ராஜாவின் பேஸ்புக் கணக்கிலிருந்து பதிவு வெளியானது. இதற்கு தமிழக திராவிட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
மேலும் எச் ராஜாவை கைது செய்ய வேண்டும் என்றும் அவர் மீது குண்டர் சட்டம் பாய வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன.

நான் பதிவிடவில்லை
பெரியார் சிலை உடைப்பு குறித்து பதிவு செய்யப்பட்ட கருத்து என்னுடையது அல்ல. என் அனுமதியின்றி எனது அட்மின் பதிவு செய்துவிட்டார் என்று எச் ராஜா விளக்கம் அளித்தார்.

ராஜா வருத்தம்
தன்னுடைய அட்மின் தெரிவித்தாலும் அந்த கருத்து தவறே என்று எச் ராஜா வருத்தம் தெரிவித்தார். எனினும் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் போராட்டம் நடைபெறுகிறது.

மனிதர்தான்
இதுகுறித்து தேசிய கயிறு வாரிய தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறுகையில் பெரியார் ஒன்றும் கடவுள் இல்லை; ஒரு மனிதர். ஹெச்.ராஜா கூறிதான் சிலையை உடைத்தனர் எனில் அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம்.

பாஜகவின் கொள்கை அல்ல
கருத்தை கருத்தால் சந்திக்காமல் வன்முறையால் சந்திப்பவர்கள் கோழைகள். வன்முறையை கையில் எடுத்தாலும் அதை ஆதரிப்பது பாஜகவின் கொள்கை அல்ல என்றார் அவர்.












Click it and Unblock the Notifications