அவிநாசி அருகே பஸ் மோதி பாலத்திலிருந்து கவிழ்ந்த கார்.. பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு
திருப்பூர் மாவட்டம் அவிசாசி அருகே பேருந்து மீது கார் உரசி மேம்பாலத்தில் இருந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
Recommended Video

திருப்பூர் : அவிநாசி அருகே அரசுப்பேருந்து மோதியதில் மேம்பாலத்தில் இருந்து கவிழ்ந்த கார் விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே தெக்கலூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியில் இருந்து சொகுசு கார் ஒன்று கோவையை நோக்கி சென்றுள்ளது.

காரில் டிரைவர் உள்பட 6 பேர் பயணித்தனர். இவர்கள் இன்று காலை திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள தெக்கலூர் கோவை-ஈரோடு 6 வழிச்சாலையில் வந்துகொண்டிருந்த போது அந்த வழியில் வந்த அரசுப் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதியுள்ளது. பஸ் மோதிய வேகத்தில் கார் 50 அடி உயர பாலத்தில் இருந்து கீழே விழுந்துள்ளது.
இதில் காரில் பயணித்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். முதல்கட்ட விசாரணையில் இவர்கள் அனைவரும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. விபத்தில் சிக்கிய கார் அரசு வாகனம் என்றும் அமைச்சர் ஒருவரது உறவினர்கள் இவர்கள் என்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனிடையே விபத்தில் காயமடைந்த கார் ஓட்டுநரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விபத்து குறித்து அவிநாசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே இறந்தவர்கள் குடும்பத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆறுதல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications