ஆண்டிப்பட்டி அருகே பயங்கரம்: வேன்-கார் மோதி 6 பேர் பலி.. 25 பேர் படுகாயம்.. பலர் உயிர் ஊசல்!
கார்-வேன் மோதி சாலை விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தேனி: ஆண்டிப்பட்டி அருகே நடைபெற்ற சாலை விபத்தில் 4 ஆண்கள் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 25-க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றனர்.
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே சிம்மரச நாயக்கனூர் என்ற இடத்தில் மதுரை நோக்கி டாடா சுமோ ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. இதில் எதிர்பாராதவிதமாக டாடா சுமோ காரும்-வேனும் பலமாக மோதிக் கொண்டன.

நேருக்கு நேர் மோதிக்கொண்ட இந்த விபத்தில், சம்பவ இடத்திலேயே 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமுற்றவர்கள் 25-க்கும் மேற்பட்டோர் தேனி அரசு மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதில் மேலும் 3 பேர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தனர். இதில் பலரது நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. எனினும், உயிருக்கு போராடி வருவோருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் டாடா சுமோ காரின் டயர் வெடித்ததாலே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதல்கட்ட விசாரணையில் போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications