அப்துல் கலாம் மணி மண்டபத்தில் செல்போன், கேமராவிற்கு தடை! கடும் கெடுபிடியால் மக்கள் அதிருப்தி!
அப்துல் கலாம் நினைவிடத்தில் செல்போன் மற்றும் கேமராவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம்: அப்துல் கலாம் நினைவிடத்திற்கு செல்போன் மற்றும் கேமரா கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பத்திரிக்கையாளர்கள் செய்தி சேகரிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் மணி மண்டபம் கடந்த 27ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. அப்துல்கலாமின் மணி மண்டபத்தை பிரதமர் மோடி திறந்து வைத்து பல்வேறு திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.
அறிவியல் விஞ்ஞானியான அப்துல்கலாமின் நினைவிடத்தில் கையில் வீணையுடன் அவர் இருப்பது போன்ற சிலை நிறுவப்பட்டது. இதுபெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

நினைவிடத்தில் கெடுபிடி
மேலும் அவரது சிலையின் அருகே இந்துக்களின் புனித நூலான பகவத்கீதை வைக்கப்பட்டதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து கலாமின் நினைவிடத்துக்கு செல்ல கடுமையான கெடுபிடிகளை அரசு விதித்துள்ளது.

செல்போன், கேமராக்களுக்குத் தடை
கலாமின் நினைவிடத்தை பார்வையிட செல்லும் மக்கள் செல்போன் மற்றும் கேமராக்கள் கொண்டு செல்லகூடாது என தடைவிதிக்கப்பட்டுள்ளது. மத்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் இந்த தடையை விதித்துள்ளது.

செய்தி சேகரிக்கவும் தடை
மேலும் அப்துல்கலாமின் நினைவிடத்தில் செய்தி சேகரிக்கவும் பத்திரிக்கையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆட்சியரின் அனுமதி பெற்றே பத்திரிக்கையாளர்கள் செய்தி சேகரிக்க வேண்டும் என்றும் மத்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

எளிமையாக பழகிய கலாம்
கலாம் நினைவிடத்தில் விதிக்கப்படும் கடும் கெடுபிடிகளால் மக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர். அறிவியல் விஞ்ஞானி, குடியரசுத் தலைவர், கல்லூரி பேராசிரியர் என தனது வாழ்க்கையை கடந்த அப்துல் கலாம் அனைவரிடமும் எளிமையாக பழகினார்.

கெடுபிடிகளால் அதிர்ச்சி
யாராலும் எளிதில் அணுகக் கூடியவராக இருந்தார். ஆனால் அவரது நினைவிடத்தில் இப்போது கடும் கெடுபிடி விதிக்கப்படுவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications