மீனவர் படுகொலைக்கு நியாயம் கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்: நிர்மலா சீதாராமன்
தமிழக மீனவர் படுகொலைக்கு நியாயம் கிடைக்க மத்திய அரசு அனைத்து நடவடிக்கையும் எடுக்கும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளித்துள்ளார்.
ராமேஸ்வரம்: தமிழக மீனவர் படுகொலைக்கு உரிய நியாயம் கிடைக்க மத்திய அரசு அனைத்து நடவடிக்கையும் எடுக்கும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளித்துள்ளார்.
ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர் பிரிட்ஜோவை நடுக்கடலில் கடந்த 6ம் தேதி இலங்கை கடற்படையினர் சுட்டுப் படுகொலை செய்தனர். இதில் மற்றொரு மீனவர் சரோன் படுகாயம் அடைந்தார்.

இப்படுகொலைக்கு கண்டனம் தெரிவித்தும் நீதி கோரியும் ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர்ந்து 6 வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காது என்று மத்திய அரசு உறுதி அளித்தால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என்றும் அதுவரை பிரிட்ஜோவின் உடலை வாங்க மாடோம் என்றும் அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய அமைச்சர் நிர்மாலா சீதாராமன் இன்று தங்கச்சிமடத்திற்கு சென்று மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். படுகொலை செய்யப்பட்ட பிரிட்ஜோவின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:
மீனவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட வேண்டும். இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டு மீனவர் உடலை நல்லடக்கம் செய்ய வேண்டும்.
தமிழக மீனவர் மீதான துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் தெரிவித்துள்ளார். மீனவர் கோரிக்கைகளை பிரதமரிடம் தெரிவிப்பேன்.
மீனவர் படுகொலைக்கு உரிய நியாயம் கிடைக்க அனைத்து நடவடிக்கையும் மத்திய அரசு எடுக்கும். இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க மத்திய அரசு நடிவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications