மாமல்லபுரம் அருகே விபத்து.. ஸ்பாட்டில் தோழி இறப்பு.. வழக்கில் ஆஜராகாத யாஷிகா ஆனந்திற்கு பிடிவாரண்ட்
செங்கல்பட்டு: மாமல்லபுரத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த விபத்து தொடர்பான வழக்கில் ஆஜராக பல முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் நடிகை யாஷிகா ஆனந்திற்கு பிடிவாரண்ட் பிறப்பித்து செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இருட்டு அறையில் முரட்டுக்குத்து, நோட்டா, ஜாம்பி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இதன் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்தார். இந்த நிலையில் யாஷிகாவின் தோழி ஹைதராபாத்தை சேர்ந்த வள்ளிச்செட்டி பாவனியுடன் (28) கடந்த 2021 ஆம் ஆண்டு சென்னை வந்திருந்தார்.

ரிசார்ட்
இதையடுத்து புதுவையில் உள்ள ஒரு ரிசார்ட்டில் இரவு பார்ட்டிக்காக ஆண் நண்பர்கள் சையத் (31), ஆமீர் (32 ) வள்ளிச் செட்டி பாவனி ஆகியோருடன் காரில் யாஷிகா சென்றிருந்தார். அப்போது இரவு பார்ட்டி முடித்துவிட்டு இவர்கள் அனைவரும் கிழக்கு கடற்கரை சாலை வழியாக நள்ளிரவில் காரில் திரும்பி கொண்டிருந்தனர்.

வேகமாக வந்த கார்
அப்போது கார் வேகமாக வந்ததாக தெரிகிறது. காரை யாஷிகா ஓட்டி வந்துள்ளார். மாமல்லபுரம் அருகே சூளேரிக்காடு என்ற இடம் வந்ததும் கார் நிலைத்தடுமாறி சாலையில் இருந்த தடுப்புச் சுவரில் மோதியது. இதில் நடுரோட்டில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த வள்ளிச் செட்டி பாவனி அதே இடத்திலேயே உயிரிழந்தார்.

காயமடைந்த யாஷிகா ஆனந்த்
மேலும் நடிகை யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட அனைவரும் படுகாயமடைந்து அலறினர். இதையடுத்து அந்த வழியே வந்த வாகன ஓட்டிகள் சிலர் மாமல்லபுரம் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீஸார் வந்து பாவனியின் சடலத்தை மீட்டனர். மேலும் காயமடைந்தவர்களையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

முதுகுதண்டில் சிகிச்சை
இந்த விபத்தில் யாஷிகாவிற்கு முதுகு தண்டில் தீவிர பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து இந்த பாதிப்பிற்காக சில மாதங்கள் அவர் சிகிச்சை மேற்கொண்டார். இந்த காயத்திலிருந்து எப்படியோ மீண்டு வந்த யாஷிகா தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். எனினும் இந்த விபத்து தொடர்பாக மாமல்லபுரம் போலீஸார் பதிவு செய்த வழக்கு செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

யாஷிகாவுக்கு பிடிவாரண்ட்
இந்த வழக்கின் விசாரணைக்காக ஆஜராகுமாறு மார்ச் 21 ஆம் தேதி நேரில் ஆஜராக நீதிபதி, யாஷிகாவுக்கு உத்தரவிட்டிருந்தார். ஆனால் யாஷிகா நேரில் ஆஜராகவில்லை. இதையடுத்து பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஏப்ரல் 25ஆம் தேதி யாஷிகா ஆனந்த் நேரில் ஆஜராக வேண்டும். இல்லாவிட்டால் அவரை போலீஸார் கைது செய்ய வாய்ப்பிருக்கிறது.
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி












Click it and Unblock the Notifications