தீபாவளி பட்டாசால் சென்னையில் பல மடங்கு காற்று மாசு.. டாப் ஏரியா எது தெரியுமா?
தீபாவளிக்கு சென்னையில் அதிக அளவில் பட்டாசு வெடித்தத்தில் காற்று கடந்த ஆண்டை விட இரண்டு மடங்கு அதிக மாசடைந்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
சென்னை : சென்னையில் வழக்கத்தை விட தீபாவளியன்று பட்டாசுப் புகையால் காற்று மாசு பல மடங்கு அதிகரித்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று கொண்டாடப்பட்ட தீபாவளிப் பண்டிகையை ஒட்டி மக்கள் பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியாக கொண்டாடினர். ஆனால் நேற்று இரவு முதலே பட்டாசுப் புகையால் சென்னையை புகை மண்டலம் சூழ்ந்தது. சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இதனால் பெரும் சிரமம் ஏற்பட்டது.

இந்நிலையில் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் பட்டாசினால் மிக அதிக அளவில் காற்று மாசடைந்துள்ளதாகக் கூறியுள்ளது. திருவல்லிக்கேணி, பெசன்ட் நகர், நுங்கம்பாக்கம், சவுக்கார்பேட்டையில் காற்று மாசு குறித்து சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இதில் திருவல்லிக்கேணியில் ஒரு கனமீட்டருக்கு 597 மைக்ரான் அளவிற்கு காற்று மாசடைந்துள்ளது தெரியவந்துள்ளது. இதே போன்று
பெசன்ட் நகரில் 387, நுங்கம்பாக்கத்தில் 541, சவுகார்பேட்டையில் 777, தி.நகரில் 529 மைக்ரான் அளவிற்கு காற்று மாசடைந்துள்ளது தெரிய வந்துள்ளது.
காற்றில் 0 முதல் 50 மைக்ரான் அளவு மைக்ரான்கள் இருந்தால் மட்டுமே மாசு ஏற்படாது, ஆனால் நேற்று ஒரே நாளில் இது மிகவும் அதிகரித்துள்ளது. இதனால் பட்டாசு வெடித்ததில் இருந்து கிளம்பிய நுண்துகள்கள் வளி மண்டலத்தில் சுற்றிக் கொண்டிருப்பதாகவும், அவை மீண்டும் பூமிக்குத் திரும்பும் போது சுவாசப் பிரச்னை, நுரையீரல் பாதிப்பு பிரச்னை ஏற்படும் என்று சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.
காற்று மாசு போல பட்டாசின் சப்தத்தால் ஒலி மாசும் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். காற்று மாசு இரண்டு மடங்காக அதிகரித்திருப்பதால் டெல்லியைப் போல சென்னையிலும் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறத் தொடங்கியுள்ளனர். இதனால் அடுத்த ஆண்டு பட்டாசு வெடிக்கும் வாய்ப்பு சென்னைவாசிகளுக்கு கிடைக்காமல் போவதற்கு அதிகம் வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications