வெடிகுண்டு மிரட்டல்… புரளி… கமிஷனர் திரிபாதி எச்சரிக்கை
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று இரட்டை குண்டு வெடித்தை அடுத்து இன்று சென்னை ஆவடி ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
அதேபோல தியாகராயநகர் கல்விநிறுவனம் ஒன்றிர்க்கும், வணிகவளாகம் ஆகியவற்றிலும் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டது. இவை அனைத்தும் புரளி என்று பின்னர் தெரியவந்துள்ளது.

இதுபோன்று வெடிகுண்டு மிரட்டல் விடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மர்ம தொலைபேசி
இன்று காலையில் மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆவடி ரயில் நிலையத்தில் குண்டு வைத்துள்ளதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
நிபுணர்கள் சோதனை
இதையடுத்து ஆவடி ரயில் நிலையத்தில் மோப்ப நாய்களுடன் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மேலும் திருநின்றவூர், பாக்கம் சோதனை சாவடிகளிலும் போலீசார் தீவிரமாக சோதனை நடத்தினர்.
ஒருமணிநேரம் நடத்தப்பட்ட சோதனையில் எதுவும் சிக்கவில்லை. அது புரளி என தெரியவந்தது.
கல்லூரிக்கும் மிரட்டல்
இதேபோல தியாகராயநகரில் உள்ள தனியார் கல்லூரிக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது. கல்லூரி நிர்வாகத்துக்கு தொலைபேசியில் மர்மப் பெண் மிரட்டல் விடுத்ததாகத் தகவல் தெரியவந்தது. தனியார் கல்லூரியில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர் சோதனையில் எதுவும் சிக்கவில்லை.
வணிகவளாகத்தில்
இதேபோல சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிகவாளத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. சென்னையில் அடுத்தடுத்து மூன்று வெடிகுண்டு மிரட்டலால் பொதுமக்களிடம் அச்சம் நிலவி வருகிறது.
கமிஷனர் எச்சரிக்கை
இதனிடையே வெடிகுண்டு மிரட்டல்கள் வெறும் புரளி என்று மாநகர காவல்துறை ஆணையர் திரிபாதி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், "இது போன்ற வதந்திகளை பரப்புவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மர்மநபர்கள் யார்?
வணிக வளாகத்திலும், ரயில் நிலையம், கல்விநிலையத்திலும் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்த நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்" என்றும் அவர் கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications