வெடிகுண்டு மிரட்டல்… புரளி… கமிஷனர் திரிபாதி எச்சரிக்கை
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று இரட்டை குண்டு வெடித்தை அடுத்து இன்று சென்னை ஆவடி ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
அதேபோல தியாகராயநகர் கல்விநிறுவனம் ஒன்றிர்க்கும், வணிகவளாகம் ஆகியவற்றிலும் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டது. இவை அனைத்தும் புரளி என்று பின்னர் தெரியவந்துள்ளது.

இதுபோன்று வெடிகுண்டு மிரட்டல் விடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மர்ம தொலைபேசி
இன்று காலையில் மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆவடி ரயில் நிலையத்தில் குண்டு வைத்துள்ளதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
நிபுணர்கள் சோதனை
இதையடுத்து ஆவடி ரயில் நிலையத்தில் மோப்ப நாய்களுடன் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மேலும் திருநின்றவூர், பாக்கம் சோதனை சாவடிகளிலும் போலீசார் தீவிரமாக சோதனை நடத்தினர்.
ஒருமணிநேரம் நடத்தப்பட்ட சோதனையில் எதுவும் சிக்கவில்லை. அது புரளி என தெரியவந்தது.
கல்லூரிக்கும் மிரட்டல்
இதேபோல தியாகராயநகரில் உள்ள தனியார் கல்லூரிக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது. கல்லூரி நிர்வாகத்துக்கு தொலைபேசியில் மர்மப் பெண் மிரட்டல் விடுத்ததாகத் தகவல் தெரியவந்தது. தனியார் கல்லூரியில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர் சோதனையில் எதுவும் சிக்கவில்லை.
வணிகவளாகத்தில்
இதேபோல சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிகவாளத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. சென்னையில் அடுத்தடுத்து மூன்று வெடிகுண்டு மிரட்டலால் பொதுமக்களிடம் அச்சம் நிலவி வருகிறது.
கமிஷனர் எச்சரிக்கை
இதனிடையே வெடிகுண்டு மிரட்டல்கள் வெறும் புரளி என்று மாநகர காவல்துறை ஆணையர் திரிபாதி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், "இது போன்ற வதந்திகளை பரப்புவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மர்மநபர்கள் யார்?
வணிக வளாகத்திலும், ரயில் நிலையம், கல்விநிலையத்திலும் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்த நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்" என்றும் அவர் கூறினார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications