சென்னை கோயம்பேடு-ஆலந்தூர் மெட்ரோவுக்கு விரைவில் அனுமதி!
சென்னை: சென்னை கோயம்பேடு- ஆலந்தூர் இடையே மெட்ரோ ரெயில் சேவைக்கான முழு அனுமதி வழங்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதியில் அனுமதி கிடைக்கலாம் என்று மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறினார்கள்.
மத்திய, மாநில அரசுகள் மற்றும் ஜப்பான் நிறுவனம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் சென்னையில் 2 வழித்தடங்களில், மெட்ரோ ரயில் சேவைக்கான பணிகள் நடந்து வருகிறது. முதல் கட்டமாக கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை 10 கிலோ மீட்டர் தூரத்திற்கான பணிகள் நிறைவடைந்துள்ளன. வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரை விரிவாக்கம் செய்வதற்காக ஆய்வு நடத்தவும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை கோயம்பேடு-ஆலந்தூர் இடையே உள்ள மெட்ரோ ரெயில் நிலைய பணிகள், ரெயில் பாதைப்பணிகள் உள்ளிட்ட அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ளன. இதனை பாதுகாப்பு ஆணையர் சதீஷ்குமார் மிட்டல் ஆய்வு செய்து கோயம்பேடு-அசோக் நகர் வரை ரெயில் கள் இயக்க அனுமதி அளித்துள்ளார். தொடர்ந்து அசோக் நகர் முதல் ஆலந்தூர் வரையிலான அனுமதியை வழங்க மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதற்கான அனுமதி கிடைத்த உடன், பாதுகாப்பு ஆணையர் ஆய்வுக்கு பின்னர் இம்மாத இறுதியில் கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை 9 ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
அலுவலக நேரங்களில் அதிகமாகவும், மற்ற நேரங்களில் குறைவாகவும் ரயில் போக்குவரத்து நடைபெற வாய்ப்பு உள்ளது. சென்னை முழுவதும் 77.5 சதவீதம் சுரங்கப்பாதை பணிகள் முடிந்துள்ளது. ஒப்பந்தகாரர்கள் பிரச்சினை தொடர்பாக பூங்கா முதல் சைதாப்பேட்டை வரை ஒரு சில பகுதிகளில் பணிகள் நிறுத்தப்பட்டு உள்ளன. விரைவில் இந்த பகுதியில் பணியை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு தெரிவித்தனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications