பல்லி விழுந்த உணவை உட்கொண்ட காயிதே மில்லத் கல்லூரி மாணவிகள் 44 பேருக்கு வாந்தி, மயக்கம்
சென்னை காயிதே மில்லத் கல்லூரி மாணவிகள் 44 பேர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை: பல்லி விழுந்த உணவை உட்கொண்டதில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காயிதே மில்லத் கல்லூரி மாணவிகள் சிகிச்சை முடிந்து திருப்பியனுப்பப்பட்டனர்.
சென்னை அண்ணா சாலையில் ஸ்பென்சர் அருகிலுள்ள காயிதே மில்லத் பெண்கள் கல்லூரி விடுதியில் தங்கியிருக்கும் மாணவிகள் வழக்கம் போல நேற்று இரவு விடுதி உணவை உட்கொண்டுள்ளனர். உணவு உண்ட பின் இரவு 10.14 மணியளவில் மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட 44 மாணவிகளும் அருகில் உள்ள ராயப்பேட்டை அரசு மருத்துவமனையிலும், சில மாணவிகள் ராஜுவ்காந்தி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

விஷமான உணவை உட்கொண்டதால் மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதையடுத்து அவர்களுக்கு மருத்துவர்கள் உடனடியாக சிகிச்சை அளித்ததில் அதிர்ஷ்டவசமாக அனைத்து மாணவிகளும் உயிர் பிழைத்தனர். மாணவிகள் உட்கொண்ட சாப்பாட்டில் எஞ்சியிருந்தவற்றை சோதனையிட்ட போது மாணவிகள் சாப்பிட்ட சட்னியில் பல்லி விழுந்திருந்தது தெரிய வந்ததையடுத்து மாணவிகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மாணவிகள் மீண்டும் விடுதிக்கு திரும்பினர். கல்லூரி விடுதியில் நடந்த அசம்பாவித சம்பவத்தையடுத்து விடுதிக்கு ஒரு வார காலம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
44 மாணவிகளுக்கு உடனடி சிகிச்சையளிக்கப்பட்டதையடுத்து அவர்கள் உயிர்பிழைத்தனர். எனினும் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications