தமிழகத்தில் இயல்பை விட 6 சதவிகித மழை குறைந்துள்ளது - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
Recommended Video

சென்னை : தமிழகத்தில் வழக்கமாக பெய்யும் வடகிழக்குப் பருவமழையின் அளவு இந்த ஆண்டு குறைந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்து உள்ளார்.
கடந்த பத்து நாட்களாக தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை, நாகை உட்பட கடலோர மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளன. சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக மழை குறைந்துள்ளது. இதுகுறித்து இன்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

அப்போது இன்னும் இரண்டு நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், உள்மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று தெரிவித்தார். மேலும், வடகிழக்கு பருவமழை இயல்பை விட 6 சதவிகிதம் குறைவாகப் பெய்துள்ளதாக அவர் தெரிவித்து உள்ளார்.
இயல்பாக தமிழகத்திற்கு வடகிழக்குப் பருவமழையின் சராசரி என்பது 26 செ.மீ ஆனால், இந்த ஆண்டு 24 செ.மீ., தான் மழை பதிவாகி உள்ளது. அதே நேரத்தில், சென்னைக்கு வழக்கத்துக்கு மாறாக இயல்பை விட 70 சதவிகிதம் மழை அதிகமாகப் பதிவாகி உள்ளது.
வழக்கமாக சென்னையின் வடகிழக்குப் பருவமழையின் அளவு 40 செ.மீ., ஆனால் இந்த முறை 68 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. அதுபோல நேற்று பெய்த மழையில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் 5 செ.மீ., மழை பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
-
சென்னையின் மெகா ப்ராஜெக்ட் இதுதான்! மதுரவாயல் டூ துறைமுகம்.. பறக்கும் சாலையில் காத்திருந்த சர்ப்ரைஸ் -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்!












Click it and Unblock the Notifications