"ஒரு ரூபாய்க்கு ஒரு டீ"... மோடி வெற்றியை வித்தியாசமாக கொண்டாடிய டீக்கடைக்காரர்!!
சென்னை: ''டீக்கடைக்காரர் டீக்கடைக்காரர்'' என்று காங்கிரஸ் கட்சிக்காரர்கள் செய்த கிண்டல் இன்று மிகப் பெரிய அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் ஒரு காலத்தில் டீ விற்றவரான நரேந்திர மோடி இன்று நாட்டின் பிரதமராகியிருப்பதைக் கொண்டாடும் வகையில் சென்னையைச் சேர்ந்த டீக்கடைக்காரர் ஒருவர் இன்று முழுவதும் தனது டீக்கடையில் ஒரு டீ ரூ 1க்கு விற்று அதிசயிக்க வைத்துள்ளார்.
ஒரு காலத்தில் தனது தந்தையுடன் சேர்ந்து ரயில் நிலையத்தில் டீ விற்றவர் நரேந்திர மோடி. இதை காங்கிரஸார் கிண்டலடிக்கப் போய் நாடு முழுவதும் டீக்கடைக்காரர்கள் கடுப்பாகி பாஜகவுக்கு ஆதரவாக மாறி விட்டனர்.
இன்று பத்து டீக்கடைகளை எடுத்தால் அதில் பாதிப் பேர் மோடி ஆதரவாளர்களாக மாறி நிற்கின்றனர். இந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த கலியமூர்த்தி என்ற டீக்கடைக்காரர் மோடியின் வெற்றியைக் கொண்டாட தனது கடையில் இன்று முழுவதும் ஒரு டீயை ஒரு ரூபாய்க்கு விற்று அசத்தியுள்ளார்.
சென்னை, எம்.ஜி.ஆர் நகர் பச்சையப்பன் நகரில் டீக் கடை வைத்துள்ளார் கலியமூர்த்தி. இன்று அவரது கடையில் ஒரு டீ ரூ 1தான். மோடி வெற்றியைக் கொண்டாடும் வகையில் இந்த ஆஃபராம். இதுகுறித்து போர்டும் வைத்திருந்தார்.
இதுதொடர்பாக கலியமூர்த்தி கூறுகையில், நான் பாஜாகவில் இருக்கிறேன். எங்களை பெருமைப்படுத்தியவர் மோடி. அவர் பிரதமராகி இருப்பது எங்களுக்கு பெருமையாக உள்ளது. எனவே இன்று முழுவதும் 1 ரூபாய்க்கு டீ விற்கிறேன்.
வழக்கமாக எனது கடையில் டீ விலை ரூ.7 ஆகும். தினமும் ரூ.5 ஆயிரத்துக்கு மேல் டீ விற்பனையாகும். இலவசமாக கொடுத்தால் நன்றாக இருக்காது. எனவே 1 ரூபாய்க்கு விற்கிறேன். இந்த நாளை மகிழ்ச்சியாக கருதுகிறேன் என்றார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications