உடலை உறுதியாக்கும் உற்சாக பண்டம் செட்டிநாடு அதிரசம், ஆன்லைனில்..
தமிழகத்தில் அதிரசம் இல்லாத ஒரு பண்டிகை என்பது பண்டிகையே இல்லை என்று கூட சொல்லலாம். அந்த அளவுக்குதமிழகத்தின் பலகார வகைகளில் அதிரசம் முக்கிய இடத்தை வகிக்கிறது.
அதிரசம் எளிமையாக செய்ய முடியுமா?
என்னதான் நம் நாட்டு பெண்கள் சமையலில் கில்லாடியாக இருந்தாலும் விதம் விதமாக, வகை வகையாக சமைக்கத்தெரிந்தவர்களாக இருந்தாலும் ஒரு சில உணவுகளை செய்வதில் மட்டும் அவர்களுக்கு எத்தனை வருடங்கள் ஆனாலும் ஒருசின்ன தடுமாற்றம் இருக்கும். எத்தனை முறை செய்தாலும் சரியாக வராமல் போகிற குறிப்பிட்ட அந்த சில பலகாரங்களில்அதிரசத்துக்கே முதலிடம். இத்தனை பாரம்பரிய இனிப்பான அதிரசத்தை எங்கே சாப்பிட்டாலும் ஒவ்வொரு இடத்திலும்ஒவ்வொரு மாதிரியான ருசியையே உணர்வோம்.
அரிசி மாவில் தான் அதிரசம் செய்வார்களா ?
பலரும் அதிரசம் என்றால் அரிசி மாவில் தான் செய்வார்கள் என்று அறிந்திருப்பார்கள். ஆனால் ஆரம்ப காலத்தில் அதிரசம்தினையை வைத்தே செய்தார்கள் ஆனால் கால மாற்றத்திற்கு ஏற்ப திணை அரிசியாக மாறிவிட்டது. ஆனால் அரிசியில்செய்தாலும் தினையை பயன்படுத்தி செய்தாலும் செய்முறை ஒன்றே.
ருசியான அதிரசம் செய்வது எப்படி.:
தேவையானவை:
தினை (அல்லது ) அரிசி - 2 கப்
வெல்லம் - 2 கப் அல்லது வெல்லத்தின் இனிப்புக்கேற்ப
ஏலக்காய் தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.
கறுப்பு எள் 1 டீஸ்பூன்
அரிசியை 2 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். பின்னர் தண்ணீரை நன்கு வடித்து விடவும். பின் அரிசியை உலர்ந்ததுணியில், நிழலில் காய வைக்கவும். முக்கால் பாகம் காய்ந்தவுடன் மிசினில் இடித்துக் கொள்ளவும். இடித்த மாவை சலித்துக்கொள்ளவும்.
வெல்லத்தை அடிகனமான பாத்திரத்தில் ¼ கப் தண்ணீர் விட்டு காய்ச்சவும். வெல்லம் முழுவதும் கரைந்ததும், அதனை வடிகட்டிமீண்டும் கம்பிபதம் வரும் வரை மெல்லிய தீயில் காய்ச்சவும். ஏலக்காய் பொடி, கறுப்பு எள் ஆகியவற்றை வெல்லபாகில்சேர்க்கவும்.
பின் சிறிது சிறிதாக வெல்லப் பாகை அரிசிமாவில் சேர்த்து கட்டி விழாதவாறு கிளறவும். அதிரசமாவானது சப்பாத்தி பதத்திற்குவரும். மாவு மேலே நெய் சிறிது தட்டி வைக்கவும். மாவை மூடி வைக்கவும்
ஒர் நாள் கழித்து, வாழை இலையில் நெய்த்தடவி எள் சேர்த்து மிதமான தீயில் ஒவ்வொன்றாக சுட்டு எடுக்கவும். மிக முறுகலான மெருதுவான அதிரசம் தயார். சுவையான அதிரசத்தை எடுத்து அனைவருக்கும் பரிமாறவும்.
இத்தகைய சுவையான சத்தான அதிரசம் தயார் செய்து உங்கள் வீட்டிற்கே கொண்டு வந்து தருகிறது நேடிவ்கிருஷ்.காம்(www.nativcrush.com) . உங்களுக்கு தேவையான அளவில் நீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்தாலே போதும் உங்கள் இல்லம் தேடிவரும் நேடிவ்கிருஷ்.காம் இன் சுவை மிகுந்த அதிரசம்.
தமிழகத்தில் பலதரப்பட்ட ஊர்களில் சிறப்பு வாய்ந்த நொறுக்கு தீனிகளை ஒரே நேரத்தில் வாங்க முடியாமலும் அதன் பயனைஅடைய முடியாமலும் நம் மக்கள் அவசர கதியில் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஓட்டத்தில் துரித உணவை உண்டு உடல்நலத்தை கெடுத்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் உடல் நலத்தை காக்கவும் நேரத்தை மிச்சபடுதவும் உங்கள் தேவையை எங்கள் சேவையாக கொண்டு வெவ்வேறுஊர்களின் சிறப்பு பெற்ற நொறுக்கு தீனிகள் இல்லம் தேடி வருகிறது. நாவில் சுவை தருகிறது. உங்கள் நேடிவ்க்ருஷ்.காம் (www.nativcrush.com).
ஒவ்வொரு ஊரில் ஒரு தின்பண்டம் சிறப்பு அவற்றை ஒரே இணையதளத்தில் மிக குறைவான விலையில் விற்கிறது நமது நேடிவ்க்ருஷ்.காம். உங்களுக்கு பிடித்த மற்றும் ஆசை பட்டு உண்ண நினைத்த பல பிரபலமான தின்பண்டங்களை மிக எளிதாகஆன்லைனில் ஆர்டர் செய்து உங்கள் வீட்டிற்கே வந்து சேரும் தின்பண்டங்களை ருசித்து மகிழுங்கள் ..
நாம் நமது சொந்த ஊர்களை விட்டு இந்தியாவின் பல இடங்களில் வேலைக்காக மற்றும் படிக்கச் சென்றுள்ளோம். அங்குஎன்னதான் பல விதமான ஸ்நாக்ஸ் சாப்பிட்டு இருந்தாலும், நமது சொந்த ஊர் ஸ்நாக்ஸ்களுக்கு ஈடாகாது என்பதை உணர்ந்து,ஒவ்வொரு ஊரின் தனித்துவமான மற்றும் அனைத்து வகையான ஸ்நாக்ஸ்களையும் எல்லோரிடமும் கொண்டு சேர்க்கஉருவாக்கப்பட்டது தான் Nativcrush.com.