தூத்துக்குடி அருகே வெளியூர் தொழிலாளர்களிடையே மதுபோதையில் தகராறு.. ஒருவர் கொலை!
தூத்துக்குடி அருகே வெளியூர் தொழிலாளர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார்.
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: வெளியூர் தொழிலாளர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார்.
தூத்துக்குடியில் கட்டுமான பணிக்காக வெளியூர்களில் இருந்து வந்து தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் அனல்மின் நிலைய குடியிருப்பில் அவர்களுக்கு இடையே மதுபோதையில் தகராறு ஏற்பட்டது.

மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் தஞ்சாவூரை சேர்ந்த மணிகண்டன் என்பவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மணி கண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கோபி என்பவரை கைது செய்து தெர்மல் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வெளியூர் தொழிலாளர்களிடையே ஏற்பட்ட மோதல் மற்றும் ஒருவர் கொல்லப்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications