ஆந்திராவில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் அறிவிப்பு
ஆந்திராவில் உயிரிழந்த 5 தமிழர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

செம்மரக்கடத்தல் பெயரில் தமிழர்களை கொன்று குவிக்கும் ஆந்திர அரசு- வீடியோ
சேலம்: ஆந்திராவில் உயிரிழந்த 5 தமிழர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஆந்திர மாநிலம் கடப்பா அருகே ஒண்டிமிட்டா வனப்பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு உள்ள ஏரியில் 5 தமிழர்களின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டது.

செம்மரம் வெட்டிக்கடத்தியவர்களை போலீசார் விரட்டியபோது அவர்கள் ஏரியில் விழுந்து உயிரிழந்திருக்கலாம் என ஆந்திர போலீஸ் கூறியது. இது ஆந்திர போலீஸாரின் திட்டமிட்ட கொலை என தமிழ் அமைப்புகள் குற்றம் சாட்டு வைத்து இருந்தது.
இந்த நிலையில் அந்த பகுதியில் இருந்து இரண்டு தமிழர்கள் மட்டும் தப்பித்து வந்தார்கள். தற்போது இந்த 5 தமிழர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
மேலும் 5 தமிழர்களின் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications