வெள்ளத்தில் 6 நாளாக மிதக்கும் சென்னை... முதல்வர், துணைமுதல்வர் ஆய்வு
சென்னையில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று இரண்டாம் கட்டமாக ஆய்வு நடத்தினார்.
சென்னை: சென்னை வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரண்டாவது கட்டமாக ஆய்வு மேற்கொண்டார். கொடுங்கையூர், சிட்லபாக்கம் உள்ளிட்ட வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆய்வு செய்து நிவாரண பணிகளை முடுக்கி விட்டார்.
சென்னையில் கடந்த ஒரு வார காலமாக பலத்த மழை பெய்துவருகிறது. சாலைகளில் மழை நீர் தேங்கிக்கிடக்கிறது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதோடு, மக்களின் இயல்பு வாழ்க்கையும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு வருகிறார். முதல்கட்டமாக வெள்ளிக்கிழமையன்று ஆர்.கே. நகர் தொகுதியில் நிவாரணம் மீட்பு பணிகளை ஆய்வு செய்தார் முதல்வர் பழனிச்சாமி. பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவுப்பொட்டலங்களை வழங்கினார். மருத்துவமுகாம்களை திறந்து வைத்தார்.
இந்த நிலையில் இரண்டாம் கட்டமாக இன்று கொடுங்கையூரில் நிவாரணம், மீட்பு பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு நடத்தினார். முதல்வருடன் அமைச்சர்களும் உடன் சென்றனர்.
இதனிடையே சென்னையில் 5 நாட்களில் 56.6 செ.மீ. பருவமழை பெய்துள்ளது என்று அமைச்சர் வேலுமணி கூறியுள்ளார். 2 மாதங்களில் பெய்ய வேண்டிய 79 செ.மீ. மழையில் 5 நாளிலேயே 56 செ.மீ. மழை பெய்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். மேலும் சென்னையில் பருவமழை தற்போது வரை 72% பெய்துள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார். நிவாரணப்பணிகள் தொய்வின்றி நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் தொற்றுநோய் பரவாமல் தடுக்க 177 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 18,000 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.
சென்னையில் 244 இடங்களில் தேங்கிய மழைநீர் அகற்றப்பட்டுள்ளது. மழைநீர் வடிகால் திட்டத்தை ஆஸ்திரேலியாவில் பார்க்க அதிகாரிகள் செல்ல இருக்கிறார்கள். அங்கு இத்திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை ஆய்வுசெய்து இங்குச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் வேலுமணி கூறியுள்ளார்.
இந்த நிலையில் கொடுங்கையூரில் இன்று காலையில் ஆய்வு மேற்கொண்டார். தென்சென்னையில் வெள்ளம் பாதித்த சிட்லபாக்கத்தில் பிற்பகலில் ஆய்வு மேற்கொண்டார். வெள்ளம் சூழ்ந்த புறநகர் பகுதிகளையும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு மேற்கொள்வார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications