தமிழ்த்தாய் வாழ்த்து பாடத் தயங்கிய போலீசார் – செல்போனில் ஒலிபரப்பி மானம் காத்த மாவட்ட கலெக்டர்!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடத்தயங்கிய காவல்துறையினருக்கு பதிலடியாக மாவட்ட ஆட்சியர் செல்போனில் வாழ்த்தினை ஒலிபரப்பிய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
பழனி அருகே உள்ள தேக்கந்தோட்டத்தில் புதிய போலீஸ் சோதனை சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. அதன் தொடக்க விழாவில் சோதனைச் சாவடியை போலீஸ் டிஜ.ஜி அறிவுச்செல்வம் திறந்து வைத்தார். அவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் வெங்கடாசலம் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
தமிழகத்தில் அரசு விழா மற்றும் அரசு நிகழ்ச்சிகள் தொடங்குவதற்கு முன்பு தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், முடிவில் தேசிய கீதமும் பாடப்படும். இவை ஒலிபெருக்கி மூலம் ஒலிபரப்பப்படும்.
ஆனால் நேற்று நடந்த விழாவில் ஒலிபெருக்கி ஆபரேட்டர் தேசியகீதத்தை ஒலிபரப்பினார். இதனை அதிகாரிகள் சுட்டிக்காட்டியதால் உடனே நிறுத்தப்பட்டது. பதறிபோன ஆபரேட்டர் தமிழ்த்தாய் வாழ்த்து குறுந்தகட்டை தேடினார். ஆனால் கிடைக்கவில்லை.
இத்தேடல் சிலநிமிடம் நீடித்ததால் அதிகாரிகள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. இதனை உணர்ந்த மாவட்ட ஆட்சியர் வெங்கடாசலம் யாராவது 2 போலீசார் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வாருங்கள் என்றார். ஆனால் போலீசார் யாரும் முன்வராமல் நெளிந்தனர்.
அதிகாரிகளும் சங்கடத்தில் நெளிய பொது மக்கள் மாவட்ட ஆட்சியரின் முகத்தை பார்த்தனர். இதையடுத்து கலெக்டர் மைக் முன்பு சென்றார்.
பின்னர் தனது செல்போனை ஆன் செய்து தமிழ்த்தாய் வாழ்த்தை பாட செய்தார். தமிழ்த்தாய் ஒலித்ததும் அதிகாரிகள் கம்பீரமாக நின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
செல்போனில் பாடலை ஒலிபரப்பிய கலெக்டர் ஏன் அவரே பாடவில்லை என்பதும் புரியவில்லை!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications