கட்டம் கட்டப்படும் எச் ராஜா.. கனிமொழி குறித்து அவதூறு பரப்பியதற்காக வழக்குப்பதிவு!
கருணாநிதி, கனிமொழி குறித்து டிவிட்டரில் அவதூறாக கருத்து பதிவிட்ட புகாரில் எச்.ராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
Recommended Video

சென்னை: திமுக எம்பி கனிமொழி கருணாநிதி, கனிமொழி குறித்து டிவிட்டரில் அவதூறாக கருத்து பதிவிட்ட புகாரில் எச்.ராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கடந்த ஏப்ரல் மாதம் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பெண் செய்தியாளரின் கன்னத்தில் தட்டிய விவகாரம் பூதாகரமானது. இதுதொடர்பாக பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.
அப்போது தமிழக பாஜக நிர்வாகியான எஸ்வி சேகர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பதாக பெண் செய்தியாளர் குறித்து இழிவான கருத்துக்களை கூறியிருந்தார்.

இழிவான கருத்துக்கள்
அதேபோல் பாஜக தேசிய செயலாளரான எச் ராஜா, அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி மற்றும் திமுக எம்பி கனிமொழி ஆகியோர் குறித்து மிகவும் இழிவான கருத்துக்களை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
|
கள்ளக்குழந்தை
அதாவது தன் கள்ள உறவில் பெற்றெடுத்த கள்ளக் குழந்தையை (illegitimate child) மாநிலங்களவை உறுப்பினராக்கிய தலைவரிடம் ஆளுநரிடம் கேட்டது போல் நிருபர்கள் கேள்வி கேட்பார்களா. மாட்டார்கள். சிதம்பரம் உதயகுமார், அண்ணாநகர் ரமேஷ், பெரம்பலூர் சாதிக் பாட்ஷா நினைவு வந்து பயமுறுத்துமே.' என பதிவிட்டிருந்தார்.

கொடும்பாவி எரிப்பு
எச் ராஜாவின் இந்த பதிவை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் பல இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர். திமுக மகளிர் அணியினர் எச் ராஜாவின் கொடும்பாவியை எரித்தனர்.

எச் ராஜா மீது வழக்கு
இந்நிலையில் இந்த விவகாரம் எச்.ராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கனியூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் வேலுசாமி ஏப்ரலில் தந்த புகாரில் கருத்தம்பட்டி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications