நோயாளிகளிடம் கட்டாய பண வசூல்- சென்னை அரசு மருத்துவமனை ஒப்பந்த ஊழியர்கள் அட்டகாசம்!
சென்னை: சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளிடம் ஒப்பந்த ஊழியர்கள் கட்டாயப்படுத்தி பண வசூல் செய்வது நோயாளிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த மருத்துவமனையில் பல்வேறு வகையான நோய்களுக்காக ஏராளமானோர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நோயாளிகளுக்கு உணவு வழங்குதல், மருத்துவ பரிசோதனைகளுக்கு அழைத்து செல்லுதல், வார்டுகளை சுத்தப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளுக்கு ஒப்பந்த பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

650 ஊழியர்கள்:
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மட்டும் மொத்தம் 650 ஒப்பந்த பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

மாதச் சம்பளம்:
இவர்களுக்கு பணிகளின் அடிப்படையில் ரூபாய் 5,200 முதல் ரூபாய் 9 ஆயிரம் வரை மாத சம்பளமாக வழங்கப்படுகிறது.

இலவச சேவைகளுக்கு வசூல்:
நோயாளிகளுக்கு "ஸ்கேன்", "எக்ஸ்-ரே" எடுப்பது, சிகிச்சை மற்றும் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு இலவச சேவைகளுக்கு ஒப்பந்த பணியாளர்கள் சிலர் கட்டாய பணம் வசூல் செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது.

அதிக அளவில் பணம்:
அதிக நோயாளிகள் வரும் விபத்து சிகிச்சை பிரிவு, எலும்பு முறிவு அவசர சிகிச்சை உள்ளிட்ட சில வார்டுகளில் அதிகமாக பணம் வசூலிக்கப்படுகிறது.

கேமராவில் பதிவு:
மருத்துவமனை வார்டுகளில் நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்களிடம் கட்டாயமாக பணம் வசூலிக்கும் காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளது.

நடவடிக்கை இல்லை:
இதனை பார்த்த பின்னரும் மருத்துவமனை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. கட்டாய வசூலில் ஈடுபடும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அரசு மருத்துவமனையில் உள்ள இலவச சேவைகளை ஏழை, எளிய மக்களும் எளிதாக பெறமுடியும்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications