5 ரத்த மாதிரியிலும் வைரஸ் இல்லை.. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கிடையாது.. சுகாதாரத்துறை குட் நியூஸ்!
கொரோனா வைரஸ் இன்னும் தமிழகத்திற்கு வரவில்லை. அதனால் மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Recommended Video
சென்னை: கொரோனா வைரஸ் இன்னும் தமிழகத்திற்கு வரவில்லை. அதனால் மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பரவி வருகிறது. மொத்தம் 22 நாடுகளுக்கு இந்த வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலும் மூன்று பேருக்கு இந்த வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.
வைரஸ் தாக்குதல் தமிழகத்தில் இன்னும் பரவவில்லை. திருவண்ணாமலை உள்ளிட்ட இரண்டு இடங்களில் இரண்டு பேருக்கு இந்த வைரஸ் தாக்குதல் இருப்பதாக அஞ்சப்பட்டது.

என்ன அச்சம்
தமிழகத்தில் வைரஸ் தாக்குதல் இருப்பதாக அஞ்சப்பட்ட எல்லோரும் சமீபத்தில் சீனா சென்று விட்டு திரும்பியவர்கள். இவர்களுக்கு தீவிரமாக சோதனை நடந்து வருகிறது. ஆனால் இதுவரை நடத்தப்பட்ட சோதனையில், இவர்களுக்கு நோய் தாக்குதல் இருப்பது உறுதி செய்யப்படவில்லை. அதேபோல் இவர்களின் ரத்த மாதிரிகள் சோதனைக்காக புனேவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

எங்கே
புனேவில் உள்ள தேசிய வைராலஜி இன்ஸ்டிடியூட்டில் இந்த ரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்டது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் ஒருவர் இந்த வைரஸ் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டார். இவர், சமீபத்தில் சீனா சென்று திரும்பியவர். இவர் தற்போது தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார். அதேபோல் புதுக்கோட்டையில் ஒருவருக்கு வைரஸ் தாக்குதல் ஏற்பட்டதாக அஞ்சப்பட்டது.

சோதனை செய்தனர்
சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த ஒருவருக்கும் வைரஸ் தாக்குதல் இருப்பதாக அஞ்சப்பட்டது.இது போல மொத்தம் 9 பேருக்கு இந்த நோய் தாக்குதல் இருக்கலாம் என்று அஞ்சப்பட்டது. இவர்களில் 5 பேரின் ரத்த மாதிரி புனேவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு நடத்தப்பட்ட சோதனையில் 5 பேருக்கும் வைரஸ் தாக்குதல் இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. அதேபோல் சென்னை தனியார் மருத்துவமனையில் இன்னும் 4 பேருக்கு சோதனை செய்யப்பட்டது.

கடைசியில் முடிவு
இவர்கள் 4 பேருக்கும் நோய் தாக்குதல் இல்லை. தமிழகத்தில் இந்த நோய் தாக்குதல் அச்சத்துடன் அனுமதி ஆன யாருக்கும் நோய் தாக்குதல் இல்லை. இந்த வைரஸ் இன்னும் தமிழகத்திற்கு வரவில்லை. அதனால் மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து இது தொடர்பான கண்காணிப்பு நடந்து வருகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications