மத்திய- மாநில அரசுகளை எதிர்த்து இடதுசாரிகள் தொடர்ந்து போராடுவோம்: ஜி.ஆர்., மகேந்திரன் உறுதி
மதுரை: மத்திய மாநில அரசுகளின் ஊழல் முறைகேடுகளை எதிர்த்து தொடர்ந்து இணைந்து போராடுவோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மகேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
மத்திய மாநில அரசுகளின் லஞ்சம், முறைகேடு, ஊழலுக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் இன்று மதுரை ஜான்சி ராணி பூங்கா அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் விஜயராஜன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகி மகேந்திரன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

இதில் ஜி.ராமகிருஷ்ணன் பேசியதாவது:
ஊழல் பாஜக
மோடி ஆட்சிக்கு வந்ததும் ஊழலற்ற நேர்மையான ஆட்சி கொடுப்போம் என்று கூறினார். ஆனால் மத்திய பிரதேசத்தில் வியாபம் ஊழல் நடந்துள்ளது. இதில் அந்த மாநிலத்தின் முதல்வரே சம்பந்தப்பட்டு இருப்பதாக தெரிகிறது. இந்த ஊழல் விசாரணை நடந்து கொண்டு இருக்கும்போதே 46 பேர் மர்மமான முறையில் இறந்து இருக்கிறார்கள்.
பாரதிய ஜனதா ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்திலும் ரூ.36 ஆயிரம் கோடி வரை ரேசன் அரிசியில் ஊழல் நடந்து இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இது போன்று மத்திய அரசு பல்வேறு ஊழல்களில் சிக்கி உள்ளது.
லலித் மோடி
ரூ.1500 கோடி ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள லலித்மோடி வெளிநாட்டுக்கு செல்ல மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே உதவி உள்ளனர். இவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
தமிழக ஊழல்
தமிழகத்தில் இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்படுகிறது. ஊழல் புகாரும் எழுந்துள்ளது. இதை தடுக்க இடதுசாரிகள் போராடும்.
இவ்வாறு ராமகிருஷ்ணன் பேசினார்.
புதிய சகாப்தம் உருவாக்கம்
இதனை தொடர்ந்து பேசிய மகேந்திரன், இடதுசாரி கட்சிகள் புதிய அரசியல் சகாப்தத்தை உருவாக்கி வருகிறது. மத்தியில் உள்ள பாரதிய ஜனதா அரசை அகற்ற தொடர்ந்து போராடுவோம். இந்தியா முழுவதும் ஊழல் மயமாகி உள்ளது என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய- மாநில அரசுகளின் லஞ்சம், முறைகேடு, ஊழலை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications