தொடரும் கனமழை... நெல்லை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் கிடு கிடு உயர்வு
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக் 28ம் தேதி தொடங்கியது. அன்று முதல் நெல்லை மாவட்ட நீர்பிடிப்பு பகுதிகளில் இடைவிடாது மழை பெய்து வருகிறது. இரவு முதல் நெல்லை மாவட்டத்தில் கனமழை பெய்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி வருகிறது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அடித்து நொறுக்கும் கன மழையால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அதிகமாக பாபநாசம் அணையில் 96 மிமீ மழை பதிவாகியுள்ளது. சேர்வலாறு அணைப்பகுதியில் 54 மிமீ மழையும், ராமநதி அணைப்பகுதியில் 80 மிமீ மழையும் பதிவாகியுள்ளது.
இந்த கனமழையால் பாபநாசம் அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 76.60 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2261.28 கன அடி தண்ணீர் வருகிறது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 95.21 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 62.85 அடியாக உள்ளது. அனைக்கு வினாடிக்கு 30 கன அடி தண்ணீர் வருகிறது.
குண்டாறு அணை அதன் முழு கொள்ளளவான 36.10 அடியை எட்டி நிரம்பி வழிகிறது. கடனா நதி அணை நீர்மட்டம் 67 அடியாக உள்ளது.
அடவி நயினார் அணையின் நீர்மட்டம் 95.50 அடியாக உள்ளது. நெல்லை மாவட்ட தாலுகாவில் அம்பையில் 43, ஆய்க்குடி 5.2, சேரன்மகாதேவி 17, நாங்குநேரி 46, பாளையங்கோட்டை 50, ராதாபுரம் 14, செங்கோட்டை 27, தென்காசி 11, நெல்லை 7, ஆலங்குளம் 2.2, விகேபுதூர் 2.2 மிமீ என மழை பதிவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications