திரையுலகின் சகாப்தம் பாலச்சந்தர்: ஸ்டாலின், மனோரமா, இளையராஜா அஞ்சலி
சென்னை: பாலசந்தரின் மறைவு திரைதுறைக்கு பேரழிப்பு என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார். திரையுலகின் சகாப்தமாக திகழ்ந்தவர் பாலச்சந்தர் என்றும் அவர் கூறியுள்ளார்.
மறைந்த கே. பாலச்சந்தர் உடலுக்கு திரையுலக பிரமுகர்கள் பலரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள பாலச்சந்தர் வீட்டில், அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இளையராஜா அஞ்சலி
இன்று காலை ஏவிஎம் சரவணன், இசையமைப்பாளர் இளையராஜா, ஆகியோர் பாலச்சந்தர் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். மேலும், நடிகர்கள் சாருஹாசன், ரவி ராகவேந்திரா உள்ளிட்டோரும் ஏராளமான நடிகைகளும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

மனோரமா கண்ணீர்
அஞ்சலி செலுத்திவிட்டு வெளியே வந்த மனோரமாவை செய்தியாளர்கள் சந்தித்த போது, மிகவும் பெருந்தன்மையானவர் அவர் என்று உணர்ச்சி பொங்க கூறினார்.

ஸ்டாலின் அஞ்சலி
இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் மறைவுக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''பாலசந்தரின் மறைவு திரைதுறைக்கு பேரழிப்பு என்றார்.

பாலச்சந்தர் ஒரு சகாப்தம்
திரையுலகின் சகாப்தமாக திகழ்ந்தவர் பாலச்சந்தர். ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்களை உருவாக்கிய மாபெரும் சகாப்தம், பாலசந்தர். கலைஞர் மீது அளவுகடந்த பற்றும் பாசமும் கொண்டவர்.

முடிசூடா மன்னர்
நாடக உலகில் மட்டுமின்றி, திரைத்துறை, சின்னத்திரையிலும் முடிசூடா மன்னராக விளங்கினார் கே.பாலச்சந்தர்

சமூக அக்கறை
திரைத்துறை மட்டுமின்றி சமூக பணியிலும் அதிக அக்கறை கொண்டவர். நான் மேயராக இருந்த போது அதிகளவில் ஊக்கமளித்தவர் அவர்'' என ஸ்டாலின் தெரிவித்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications