நாடா புயல்.. பரவலாக மழை... விவசாயிகள் மகிழ்ச்சி… வெறிச்சோடிய சுற்றுலாத் தலங்கள்
நாடா புயலால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதால், விவசாயி மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை: தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீர் இல்லாமல் பயிர்கள் வாடி கருகி இருந்த நிலையில் இந்த மழை விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை நாடா புயல் காரைக்கால் அருகில் கரையை கடந்தது. இதனால் கடந்த 2 நாட்களாக நாகை மாவட்டம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது.
இதர டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சை, மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, குடவாசல், நன்னிலம், வலங்கைமான், முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளது.

டெல்டாவில் நல்ல மழை
நேற்றில் இருந்தே டெல்டா மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. கும்பகோணம், ஒரத்தநாடு, பாபநாசம், திருவையாறு, திருவிடைமருதூர், திருப்பனந்தாள், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மதுக்கூர், அதிராம்பட்டினம், பூதலூர், அம்மாப்பேட்டை ஆகிய பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

புயலில் இருந்து தப்பித்த கடலூர்
தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடலூர் அருகே கரையைக் கடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கடலூர் மாவட்டத்தை தானே புயல் தாக்கியது போன்று இந்த முறையும் நாடா புயல் தாக்கும் என்று கடலூர் வாசிகள் பயந்திருந்த நிலையில், நாடா புயல் அமைதியாகவே கரையை கடந்து விட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று காலையில் இருந்தே விட்டுவிட்டு மழை பெய்து வந்தது. திருவண்ணாமலை, திருச்சி, புதுக்கோட்டை, கரூர், அரியலூர் மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்துள்ளது.

வெறிச்சோடிய சுற்றுலா மையங்கள்
தேனி, திண்டுக்கல் ஆகிய தென் மாவட்டங்களிலும், கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மேற்கு மாவட்டங்களிலும் மழை லேசாகவே இருந்தது. ஆனாலும் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததால், கொடைக்கானல், ஊட்டி உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் வெறிச்சோடியே காணப்பட்டன.

மீண்டும் தொடங்கிய படகு போக்குவரத்து
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடலோர பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த காற்று வீசி வருகிறது. பலத்த மழை பெய்து வந்ததால், விவேகானந்தர் பாறைக்குச் செல்லும் படகுகள் ரத்து செய்யப்பட்டிருந்தது. பின்னர், நிலைமை சற்று சீரடைந்துள்ளதையடுத்து மீண்டும் படகு போக்குவரத்து தொடங்கியுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications