மோடி பண மதிப்பிழப்பு குண்டை தூக்கிப் போட்ட நாள் இன்று: மறக்குமா, மறக்கத் தான் முடியுமா?
சென்னை: பண மதிப்பிழப்பு அறிவிப்பு வெளியிட்டு இன்றுடன் ஓராண்டு ஆகிறது. அந்த தினத்தை மக்கள் யாராலும் மறக்க முடியாது.
கருப்பு பணத்தை ஒழிக்கிறேன் என்ற பெயரில் மத்திய அரசு திடீர் என்று கடந்த ஆண்டு நவம்பரம் மாதம் 8ம் தேதி 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிப்பு வெளியிட்டது.
மேலும் 2000 ரூபாய் நோட்டு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

வங்கி
பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பு அறிவிப்பை கேட்டு பணக்காரர்கள் அல்ல அன்றாடம் கஷ்டப்படும் ஏழைகள் தான் அதிர்ச்சி அடைந்தனர். கையில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்கள் வங்கிகளில் மணிக்கணக்கில் கால் வலிக்க நின்றனர்.

இறப்புகள்
முறையான திட்டமிடல் இல்லாமல் அறிவிக்கப்பட்ட பண மதிப்பிழப்பு திட்டத்தால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க வரிசையில் நின்றபோது பலர் உயிர் இழந்தனர். பல ஏடிஎம் மையங்களில் பணமும் இல்லை.

ஜப்பான்
மக்கள் கையில் செலவுக்கு பணம் இல்லாமல், ஏடிஎம்மிலும் பணம் இல்லாமல் அல்லாடிக் கொண்டிருந்த வேளையில் மோடி ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இது மக்களை கோபம் அடைய வைத்தது.

கோபம்
ஏடிஎம்மில் நாள் ஒன்றுக்கு இரண்டாயிரம் ரூபாய் மட்டுமே எடுக்கலாம் என்ற அறிவிப்பால் மக்கள் பட்டபாடு கொஞ்சம் இல்லை. மோடியின் இந்த செயலால் பல திருமணங்கள் தள்ளிப் போயின. ஆத்திர அவசரத்திற்கு காசில்லாமல் பல உயிர்கள் பரிதாபமாக போயின. இத்தனைக்கும் காரணமான அந்த பணமதிப்பிழப்பு அறிவிப்பு வெளியான நாளை மக்கள் கருப்பு தினமாகவே பார்க்கிறார்கள்.

படுதோல்வி
பண மதிப்பிழப்பு நடவடிக்கை படுதோல்வி அடைந்துள்ளது. இது மத்திய அரசின் மிகப் பெரிய தவறு என்று பாஜக தலைவர்கள் சிலரே ஒப்புக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்!












Click it and Unblock the Notifications