சென்னையில் கைப்பற்றப்பட்ட ரூ.45 கோடி பணம் - ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைக்க முடிவு
சென்னையில் பாஜக பிரமுகரிடம் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.45 கோடி பழைய ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
சென்னை: சென்னை கோடம்பாக்கத்தில் பாஜக பிரமுகருக்கு சொந்தமான துணிக்கடையில் பதுக்கப்பட்டிருந்த பழைய 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரூ.45 கோடி ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
சென்னை சக்காரியா காலனி 2-வது தெருவில் துணிக்கடையும் வீடுமாக இருந்த இடத்தில் அட்டைப்பெட்டிகளில் கட்டுக்கட்டாக பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் சிக்கியுள்ளது. இந்தப் பணத்துக்குச் சொந்தக்காரரான தண்டபாணி பாஜக பிரமுகராவார். வழக்கறிஞரான இவர் பள்ளிச்சீருடை மற்றும் போலீஸ், ராணுவ சீருடைகள் விற்கும் கடையை நடத்தி வருகிறார்.

கட்டுக்கட்டாக பணம்
இவரது கடையில் பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட பழைய 1000 ரூபாய் நோட்டுகள் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து துணை ஆணையர் தலைமையிலான போலீஸ் குழு தண்டபாணியின் கடைக்கு சென்ற சோதனை மேற்கொண்டனர். அங்கே கட்டு கட்டாக பெட்டிகளுக்குள் ரூ.45 கோடி ரூபாய் இருப்பதை கண்டு பிடித்தனர்.

பாஜக பிரமுகர்
இதனையடுத்து தண்டபாணி கோடம்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். பணத்தைப் பாதுகாப்பாக வைக்கக்கோரி இன்னொருவர் தன்னிடம் இந்தத் தொகையை அளித்ததாக தண்டபாணி தெரிவித்தார்.

போலீஸ் விசாரணை
பணம் கைப்பற்றப்பட்ட செய்தி வருமான வரித்துறையினருக்கும் அமலாக்கப் பிரிவினருக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பணத்தை தண்டபாணியிடம் கொடுத்து வைத்த முக்கிய பிரமுகர் யார் என்று போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைக்க முடிவு
பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு கமிஷன் அடிப்படையில் சிலர் பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொடுத்து கோடீஸ்வரர் ஆகியுள்ளனர். சென்னையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் இப்போது அதிக அளவில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே தண்டபாணியிடம் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.45 கோடி பழைய ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications