நெல்லை அரசு மருத்துவமனையில் டெங்கு பிரிவு மீண்டும் தொடக்கம்
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதை தொடர்ந்து அங்கு உள்ள அரசு மருத்துவமனையில் டெங்கு பிரிவு மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டெங்கு காய்ச்சல் பரவியது. டெங்கு காய்ச்சலுக்கு 50க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து அப்போது நெல்லை அரசு மருத்துவக் கல்லுரி மருத்துவமனையில் குழந்தைகள் சிகிச்சை பிரிவில் டெங்கு காய்ச்சலுக்கு சிறப்பு வார்டு அமைக்கப்பட்டது.

பின்னர் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் வந்ததால் சிறப்பு வார்டு மூடப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக நெல்லை மாவட்டத்தில் மீண்டும் டெங்கு தலை தூக்கி வருகிறது. பல கிராமங்களில் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளது. குறிப்பாக முக்கூடல் தாளாளர் குளத்தில் டெங்கு காய்ச்சல் பாதித்து 3 சிறுவர்கள் பலியாகினர். இதனால் நெல்லை அரசு மருத்துவமனையில் டெங்குவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதையடுத்து நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் வார்டில் மீண்டும் டெங்கு சிகிச்சை பிரிவு செயல்படத் தொடங்கியுள்ளது. தற்போது டெங்கு சிறப்பு வார்டில் 9 குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் மரியபவுசி, அபினயா ஆகிய இரு குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுபோல் பெரியவர்கள் சிகிச்சை பிரிவில் 6 பேர் காயச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து மருத்துவமனை டீன் கூறுகையில்,
காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல சிகிச்சை அளிக்கப்படுகிறது. பலர் தேறி வருகின்றனர். இதில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்துவோம் என்றார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications