அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் உட்பட 11 பேர்தான் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும்- தினகரன் தரப்பு
எடப்பாடி அரசுக்கு எதிராக கொறடா உத்தரவை மீறி வாக்களித்த ஓபிஎஸ் உட்பட 11 பேர்தான் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்கிறது தினகரன் தரப்பு.
சென்னை: முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியபோது கொறடா உத்தரவை மீறி வாக்களித்த தற்போதைய துணை முதல்வர் ஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்கள்தான் உண்மையில் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி செய்யப்பட வேண்டும் என்பது தினகரன் தரப்பு வாதம்.
முதல்வர் பதவியை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்துவிட்டனர்; அதனால் தம்மை பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் 11 எம்.எல்.ஏக்களுடன் சென்று ஓபிஎஸ் மனு கொடுத்து காத்திருந்தார். அதேநேரத்தில் சசிகலா தம்மை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என 122 எம்.எல்.ஏக்களுடன் ஆளுநரிடம் மனு கொடுத்தார்.
ஆனால் சசிகலா மீதான வழக்கின் தீர்ப்புக்காக காத்திருந்தார். சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கான தண்டனை உறுதி செய்யப்பட அவரும் சிறைக்கு சென்றார்.

நம்பிக்கை வாக்கெடுப்பு
இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக தேர்ந்தெடுத்தனர் அதிமுக எம்.எல்.ஏக்கள். எடப்பாடி பழனிச்சாமியும் சட்டசபையில் கடந்த பிப்ரவரி மாதம் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார்.

கொறடா உத்தரவை மீறி வாக்களிப்பு
அப்போது எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிராக அதிமுகவின் கொறடா உத்தரவை மீறி ஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர். இருப்பினும் எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மையை நிரூபித்தது.

11 பேர் தகுதி நீக்கத்துக்கு தகுதி
அப்போதே கட்சி கொறடா உத்தரவை மீறி வாக்களித்த ஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை வலியுறுத்தி சபாநாயகர் தனபாலிடம் எடப்பாடி தரப்பு கடிதம் கொடுத்தது. கட்சி தாவல் தடை சட்டவிதிகளின் படியும் நீதிமன்ற தீர்ப்புகளின்படியும் இந்த நேரம் 11 எம்.எல்.ஏக்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு எதிரானது
ஆனால் அதற்கு மாறாக 'முதல்வர் மீது நம்பிக்கை இல்லை' என கடிதம் கொடுத்த ஒரே காரணத்தால் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். இது கர்நாடகாவின் எதியூரப்பா வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிரானது என்கிறது தினகரன் தரப்பு. தற்போது கட்சி கொறடா உத்தரவை மீறி வாக்களித்த ஓபிஎஸ் உட்பட 11 பேர் மீதான நடவடிக்கையை தாங்கள் வலியுறுத்துவோம்; நீதிமன்றத்திலும் முறையிடுவோம் என்கிறது தினகரன் தரப்பு.
-
மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும்.. 297 அறிவிப்புகள் அடங்கிய அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட எடப்பாடி -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
அதிமுக கூட்டணியில் தமாகா, ஐஜேகே கட்சிகளுக்கு எத்தனை சீட்? எடப்பாடி பழனிசாமி சொன்ன மேட்டர்! -
எடப்பாடியின் அரசியல் "மெச்சூரிட்டி".. பாஜக, அமமுகவை அடக்கி.. சத்தமே இன்றி சம்பவம் பண்ணிட்டாரே! -
அதிமுக தொகுதி பங்கீடு எல்லாம் ஓகேதான்! ஆனா.. ஜி.கே.வாசன் மிஸ்ஸிங்! கவனிச்சிங்களா! -
தேர்தலுக்கு முன்பே.. முக்கியமான "வாரில்" தோற்ற விஜய்.. தவெக இப்பவும் சுதாரிக்கலைனா.. போச்சு! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
நாங்கள் எல்லாம் சிவி சண்முகத்தின் அடிமைகளா? பலிகடா ஆகணுமா? பொங்கி எழுந்த ரத்தத்தின் ரத்தங்கள் -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
பினாமிகளுக்கு தான் சீட்.. சிவி சண்முகத்திற்கு எதிராக எழுந்த கலக குரல்.. விலகிய அதிமுக நிர்வாகி!












Click it and Unblock the Notifications