அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் உட்பட 11 பேர்தான் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும்- தினகரன் தரப்பு
எடப்பாடி அரசுக்கு எதிராக கொறடா உத்தரவை மீறி வாக்களித்த ஓபிஎஸ் உட்பட 11 பேர்தான் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்கிறது தினகரன் தரப்பு.
சென்னை: முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியபோது கொறடா உத்தரவை மீறி வாக்களித்த தற்போதைய துணை முதல்வர் ஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்கள்தான் உண்மையில் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி செய்யப்பட வேண்டும் என்பது தினகரன் தரப்பு வாதம்.
முதல்வர் பதவியை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்துவிட்டனர்; அதனால் தம்மை பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் 11 எம்.எல்.ஏக்களுடன் சென்று ஓபிஎஸ் மனு கொடுத்து காத்திருந்தார். அதேநேரத்தில் சசிகலா தம்மை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என 122 எம்.எல்.ஏக்களுடன் ஆளுநரிடம் மனு கொடுத்தார்.
ஆனால் சசிகலா மீதான வழக்கின் தீர்ப்புக்காக காத்திருந்தார். சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கான தண்டனை உறுதி செய்யப்பட அவரும் சிறைக்கு சென்றார்.

நம்பிக்கை வாக்கெடுப்பு
இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக தேர்ந்தெடுத்தனர் அதிமுக எம்.எல்.ஏக்கள். எடப்பாடி பழனிச்சாமியும் சட்டசபையில் கடந்த பிப்ரவரி மாதம் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார்.

கொறடா உத்தரவை மீறி வாக்களிப்பு
அப்போது எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிராக அதிமுகவின் கொறடா உத்தரவை மீறி ஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர். இருப்பினும் எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மையை நிரூபித்தது.

11 பேர் தகுதி நீக்கத்துக்கு தகுதி
அப்போதே கட்சி கொறடா உத்தரவை மீறி வாக்களித்த ஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை வலியுறுத்தி சபாநாயகர் தனபாலிடம் எடப்பாடி தரப்பு கடிதம் கொடுத்தது. கட்சி தாவல் தடை சட்டவிதிகளின் படியும் நீதிமன்ற தீர்ப்புகளின்படியும் இந்த நேரம் 11 எம்.எல்.ஏக்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு எதிரானது
ஆனால் அதற்கு மாறாக 'முதல்வர் மீது நம்பிக்கை இல்லை' என கடிதம் கொடுத்த ஒரே காரணத்தால் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். இது கர்நாடகாவின் எதியூரப்பா வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிரானது என்கிறது தினகரன் தரப்பு. தற்போது கட்சி கொறடா உத்தரவை மீறி வாக்களித்த ஓபிஎஸ் உட்பட 11 பேர் மீதான நடவடிக்கையை தாங்கள் வலியுறுத்துவோம்; நீதிமன்றத்திலும் முறையிடுவோம் என்கிறது தினகரன் தரப்பு.
-
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications