#Exclusive காங்கிரஸ் தொலைந்து போக காரணமே திமுக தான்.. கட்சி எப்படி வளரும்? பழ.கருப்பையா பரபர பேட்டி!
சென்னை : "காங்கிரஸ் கட்சி தொலைந்து போனதற்குக் காரணம் திமுக, சொந்தக் கட்சியை வளர்க்காமல் திமுக பின்னாலேயே திரிந்தால் காங்கிரஸ் எப்படி வளரும்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார் தமிழ்நாடு தன்னுரிமை கழகத்தின் நிறுவனரும், மூத்த அரசியல் தலைவருமான பழ.கருப்ப்பையா.
காங்கிரஸ் கட்சியில் தனது அரசியல் அத்தியாயத்தைத் தொடங்கிய பழ.கருப்பையா, காமராஜரின் சிண்டிகேட் காங்கிரஸ் கட்சியில் இருந்தார். காமராஜர் மறைந்த பின்னர் ஜனதா கட்சியில் சேர்ந்தார். பின்னர் ஜனதா கட்சி, திமுக, மதிமுக, காங்கிரஸ், அதிமுக என பல கட்சிகளுக்குச் சென்றார். அதிமுகவில் இருந்தபோதே அக்கட்சியை தாக்கிப் பேசியதற்காக ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

பின்னர் திமுகவிலும் அதன் பிறகு மக்கள் நீதி மய்யத்திலும் செயல்பட்டார். இதையடுத்து, தமிழ்நாடு தன்னுரிமைக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கி செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், நமது ஒன் இந்தியா தமிழுக்கு பேட்டி அளித்துள்ளார் முதுபெரும் அரசியல் தலைவரான பழ.கருப்பையா.
பாஜக நினைப்பு : அவரது பேட்டியில், "என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று பாஜக கொஞ்ச காலமாக நினைக்கிறது. 2 மோடிகள் அயோக்கியர்கள்.. அயோக்கியர்களாக இருப்பவர்கள் எல்லாம் மோடி என்றுதான் பெயர் வைப்பார்களா என ராகுல் காந்தி இயல்பாக நக்கலாக கேட்ட கேள்விக்கு, அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து, அவரது எம்.பி பதவியை அடுத்த நாளே பிடுங்கும் அட்டூழியம் நடக்கிறது. உலகில் எந்த நாட்டிலாவது அவதூறுக்கு கிரிமினல் சட்டத்தில் தண்டனை வழங்கப்படுமா? அந்த நீதிபதிக்கு குஜராத் அரசால் உடனடியாக பதவி வழங்கப்படுகிறது, அதனை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

அதுதான் நடந்துள்ளது : இப்படி இருந்தால் யார் நாட்டில் அரசியல் செய்ய முடியும்? ஜனநாயகத்தை எப்படி நிலைநிறுத்துவது? கர்நாடகாவில் முஸ்லீம்களுக்கு வழங்கப்பட்ட 4 சதவீத இட ஒதுக்கீட்டை பறித்து பெரும்பான்மையாக உள்ள லிங்காயத் மற்றும் வொக்கலிகர் சமூகத்தவருக்கு தலா 2 சதவீதம் என வழங்க முடிவெடுத்தது பாஜக அரசு. முஸ்லீம்கள் ஓட்டு போடவில்லை என்றால் பரவாயில்லை என பாஜக முடிவெடுத்தது. என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என ஒரு அரசு முடிவெடுத்தால், மக்கள் தண்டிப்பார்கள், அது கர்நாடகாவில் நடந்துள்ளது.
அதானிகள் ஆளுங்கட்சிகளை உருவாக்குவார்கள். மோடியை உருவாக்கியது அதானி. மோடி ஆட்சிக்கு வந்தபிறகு உலகின் மூன்றாவது பணக்காரராக அதானியை உருவாக்குகிறார். மோடி ஆட்சியின் உறுத்தலே சிறுபான்மையின மக்களை வதைப்பதுதான். இந்துக்கள் என்ற ஒருங்கிணைப்பின் மூலம், நாட்டை ஆள நினைக்கிறது பாஜக. சிறுபான்மையின மக்களுக்கு எதிரான சட்டங்கள் இயற்றப்படுகின்றன.

காரணம் திமுக : காங்கிரஸ் கட்சி தொலைந்து போனதற்குக் காரணம் திமுக, ஆ.ராசா. மன்மோகன் சிங்கின் ஆட்சி நல்லாட்சி. 2 முறை சிறப்பாக ஆட்சி செய்தார். டிஆர் பாலுவை அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ள மாட்டேன் எனச் சொல்லும் அளவுக்கு இருந்தார். 2ஜி முறைகேட்டில் 1.76 லட்சம் கோடி அடித்துவிட்டார்கள் என்று சொல்லித்தானே மோடி ஆட்சிக்கு வந்தார். பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தங்கள் வலிமையை இழந்துவிட்டது.
தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், ஒரு 10 பேர் எம்.பி ஆகவும், 20 பேர் எம்.எல்.ஏ ஆகவும் வேண்டிச் செய்ததைத் தவிர இங்கு ஏதாவது செய்திருக்கிறார்களா? ப.சிதம்பரம், திருநாவுக்கரசர் என ஒரு 15 பேர் பட்டியலில் இருப்பவர்கள் தான் திரும்பத் திரும்ப எம்.பி ஆவார்கள். ஒரு பொதுக்கூட்டம் நடத்தமாட்டார்கள், பிரச்சனையை பேச மாட்டார்கள். கூட்டணிக் கட்சி என்றால் அடிமையா? சொந்தக் கட்சியை வளர்க்க வேண்டாமா? திமுக பின்னாலேயே திரிந்தால் காங்கிரஸ் எப்படி வளரும்?" எனத் தெரிவித்துள்ளார்.

-
15 ஆண்டுகளாக 1 சீட் கூட ஜெயிக்காத தேமுதிகவுக்கு 10 தொகுதிகளா? திமுக கூட்டணிக்குள் கொதிப்பு! -
விருகம்பாக்கம், விருதுநகர்.. தேமுதிக போட்டியிட விரும்பும் 10 தொகுதிகள் எது? பூரிப்புடன் சொன்ன பிரேமலதா -
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
அதிமுக கூட்டணியில் தமாகா, ஐஜேகே கட்சிகளுக்கு எத்தனை சீட்? எடப்பாடி பழனிசாமி சொன்ன மேட்டர்! -
2026ல் மீண்டும் திமுக! ஸ்டாலின்தான் முதல்வர்! பாலிமார்க்கெட் கணிப்பு சந்தையில் எகிறும் திமுக கிராஃப் -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக் -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
சர்ச்சை பேச்சு விவகாரம்.. முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு! -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
விசிகவின் ராஜ்ய சபா சீட் கோரிக்கை.. ஸ்டாலின் சொன்னது என்ன? திருமாவளவன் கொடுத்த விளக்கம்











Click it and Unblock the Notifications