மதுவிலக்கு... அரசுக்கு எதிராக 56 இடங்களில் ஆர்ப்பாட்டம்- கொந்தளித்த திமுகவினர்
சென்னை: மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆளும் கட்சிக்கு எதிராக திமுகவினர் நடத்திய ஆர்பாட்டம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க. தலைவர் கருணாநிதி ஏற்கனவே அறிவித் படி தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில், மாவட்ட செயலாளர்கள் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தெற்கில் ஸ்டாலின்
சென்னையில் 4 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் தலைமையில், சோழிங்கநல்லூர் சிக்னல் பழைய மகாபலிபுரம் சாலை - கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பில் உள்ள கலைஞர் தெருவில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

கிழக்கில் கனிமொழி
சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு தலைமையில், சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கனிமொழி எம்.பி. பங்கேற்று ஆளுங்கட்சிக்கு எதிராக முழக்கமிட்டார்.

திண்டுக்கல் ஐ.பெரியசாமி
திண்டுக்கல் மாநகராட்சி முன்பு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார், மேற்கு மாவட்ட செயலாளரும், ஒட்டன்சந்திரம் எம்எல்ஏவுமான சக்கரபாணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பெண்கள் மட்டும் சுமார் இரண்டாயிரம் பேர் பங்கேற்றனர்.

கருணாநிதி நிறைவேற்றுவார்
கூட்டத்தில் பேசிய ஐ. பெரியசாமி, கலைஞர் ஆட்சிக்கு வந்தால் 7 கோடி மக்களுக்கும் பூரண மதுவிலக்கு கொண்டுவரப்படும் என்று நம்பிக்கை வைத்துள்ளனர். ஏனென்றால் 2006ல் கொடுத்த வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றினார். இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, முதியோர் உதவி தொகை, பெண்களுக்கு இடஒதுக்கீடு போன்றவற்றை சொன்னதை செய்தார். அதேபோல் இதனையும் நிறைவேற்றுவார்.

சசிபெருமாள் நன்றி
தன் மீது உள்ள வழக்கில் விடுதலையாக வேண்டும் என்று மக்களைப் பற்றி ஜெயலலிதா சிந்திக்கவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு அமல்படுத்துவேன் என்று கருணாநிதி அறிவித்தார். உடனே பூரண மதுவிலக்கு கோரி போராடி வந்த சசிபெருமாள் கலைஞரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார் என்றார் ஐ.பெரியசாமி.

திருவண்ணாமலை
திருவண்ணாமலை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட செயலாளர்கள் எ.வ.வேலு, சிவானந்தம் தலைமையிலும், விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் பொன்முடி தலைமையிலும் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

காஞ்சிபுரம் - நெல்லை
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் தலைமையில் தாம்பரம் சண்முகம் சாலையிலும், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் தலைமையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லை,தென்காசி உள்ளிட்ட இடங்களில் 800க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications