மதுவிலக்கு... அரசுக்கு எதிராக 56 இடங்களில் ஆர்ப்பாட்டம்- கொந்தளித்த திமுகவினர்
சென்னை: மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆளும் கட்சிக்கு எதிராக திமுகவினர் நடத்திய ஆர்பாட்டம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க. தலைவர் கருணாநிதி ஏற்கனவே அறிவித் படி தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில், மாவட்ட செயலாளர்கள் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தெற்கில் ஸ்டாலின்
சென்னையில் 4 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் தலைமையில், சோழிங்கநல்லூர் சிக்னல் பழைய மகாபலிபுரம் சாலை - கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பில் உள்ள கலைஞர் தெருவில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

கிழக்கில் கனிமொழி
சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு தலைமையில், சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கனிமொழி எம்.பி. பங்கேற்று ஆளுங்கட்சிக்கு எதிராக முழக்கமிட்டார்.

திண்டுக்கல் ஐ.பெரியசாமி
திண்டுக்கல் மாநகராட்சி முன்பு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார், மேற்கு மாவட்ட செயலாளரும், ஒட்டன்சந்திரம் எம்எல்ஏவுமான சக்கரபாணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பெண்கள் மட்டும் சுமார் இரண்டாயிரம் பேர் பங்கேற்றனர்.

கருணாநிதி நிறைவேற்றுவார்
கூட்டத்தில் பேசிய ஐ. பெரியசாமி, கலைஞர் ஆட்சிக்கு வந்தால் 7 கோடி மக்களுக்கும் பூரண மதுவிலக்கு கொண்டுவரப்படும் என்று நம்பிக்கை வைத்துள்ளனர். ஏனென்றால் 2006ல் கொடுத்த வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றினார். இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, முதியோர் உதவி தொகை, பெண்களுக்கு இடஒதுக்கீடு போன்றவற்றை சொன்னதை செய்தார். அதேபோல் இதனையும் நிறைவேற்றுவார்.

சசிபெருமாள் நன்றி
தன் மீது உள்ள வழக்கில் விடுதலையாக வேண்டும் என்று மக்களைப் பற்றி ஜெயலலிதா சிந்திக்கவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு அமல்படுத்துவேன் என்று கருணாநிதி அறிவித்தார். உடனே பூரண மதுவிலக்கு கோரி போராடி வந்த சசிபெருமாள் கலைஞரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார் என்றார் ஐ.பெரியசாமி.

திருவண்ணாமலை
திருவண்ணாமலை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட செயலாளர்கள் எ.வ.வேலு, சிவானந்தம் தலைமையிலும், விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் பொன்முடி தலைமையிலும் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

காஞ்சிபுரம் - நெல்லை
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் தலைமையில் தாம்பரம் சண்முகம் சாலையிலும், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் தலைமையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லை,தென்காசி உள்ளிட்ட இடங்களில் 800க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications