ஊசி போடுவதாக நடித்து கர்ப்பிணியிடம் 9 பவுன் நகைகளைத் திருடிய போலி டாக்டர்
திருப்பூர்: திருப்பூரில், கர்ப்பிணிப் பெண்ணிடம் ஊசி போடுவதாக ஏமாற்றி நகையை கொள்ளையடித்த போலி டாக்டரைப் போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம், வி.வேலூர் அருகே உள்ள செல்வநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பனியன் கம்பெனி ஊழியரான ஜெகதீஷின் மனைவி பூங்கொடி. தற்போது நிறைமாத கர்ப்பிணியான பூங்கொடியை காந்திபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதித்தனர் அவரது குடும்பத்தினர்..
நேற்று முன்தினம் இரவு, பூங்கொடியை பரிசோதனை செய்யப் போவதாகக் கூறிக் கொண்டு, டாக்டர் உடையுடன் மர்ம நபர் ஒருவர் வந்துள்ளார். பூங்கொடிக்கு ஊசி போடப் போவதாகக் கூறி, அவரது சகோதரர் பழனிச்சாமியை அறையை விட்டு வெளியே போகச் சொல்லியுள்ளார் அந்த டாக்டர்.
அத்தோடு, கழுத்தில் ஊசிபோட வேண்டும் எனக்கூறி, ஏழு பவுன் தாலிச் சங்கிலி, இரண்டு பவுன் வளையல்களை கழற்றி வாங்கி கீழே வைத்துவிடுமாறு பூங்கொடியுடன் கூறியுள்ளார் அந்த மர்மநபர்.
அவரது பேச்சைக் கேட்டு, அனைத்து நகைகளையும் கழற்றி வைத்த பூங்கொடி, ஊசி போடுவார் என நம்பி திரும்பி படுத்துள்ளார். ஆனால், வெகுநேரமாகியும் ஊசி போடப் படாததால், சந்தேகமடைந்த பூங்கொடி திரும்பி பார்த்து அதிர்ந்துள்ளார்.
காரணம் அறையில் டாக்டரும் இல்லை, பூங்கொடியின் நகைகளும் இல்லை. பூங்கொடியின் சத்தம் கேட்டு ஓடி வந்த அவரது அண்ணன் பழனிச்சாமி, நகைகளுடன் மாயமான போலி டாக்டரை மருத்துவமனை முழுவதும் தேடிப் பார்த்துள்ளார். ஆனால், குற்றவாளி பிடிபடவில்லை.
தகவலறிந்த காட்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும், மருத்துவமனையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வரும் போலீசார், விரைவில் நகைகளை திருடிய போலி டாக்டர் கைது செய்யப்படுவார் என தெரிவித்துள்ளனர்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications