ஊசி போடுவதாக நடித்து கர்ப்பிணியிடம் 9 பவுன் நகைகளைத் திருடிய போலி டாக்டர்
திருப்பூர்: திருப்பூரில், கர்ப்பிணிப் பெண்ணிடம் ஊசி போடுவதாக ஏமாற்றி நகையை கொள்ளையடித்த போலி டாக்டரைப் போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம், வி.வேலூர் அருகே உள்ள செல்வநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பனியன் கம்பெனி ஊழியரான ஜெகதீஷின் மனைவி பூங்கொடி. தற்போது நிறைமாத கர்ப்பிணியான பூங்கொடியை காந்திபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதித்தனர் அவரது குடும்பத்தினர்..
நேற்று முன்தினம் இரவு, பூங்கொடியை பரிசோதனை செய்யப் போவதாகக் கூறிக் கொண்டு, டாக்டர் உடையுடன் மர்ம நபர் ஒருவர் வந்துள்ளார். பூங்கொடிக்கு ஊசி போடப் போவதாகக் கூறி, அவரது சகோதரர் பழனிச்சாமியை அறையை விட்டு வெளியே போகச் சொல்லியுள்ளார் அந்த டாக்டர்.
அத்தோடு, கழுத்தில் ஊசிபோட வேண்டும் எனக்கூறி, ஏழு பவுன் தாலிச் சங்கிலி, இரண்டு பவுன் வளையல்களை கழற்றி வாங்கி கீழே வைத்துவிடுமாறு பூங்கொடியுடன் கூறியுள்ளார் அந்த மர்மநபர்.
அவரது பேச்சைக் கேட்டு, அனைத்து நகைகளையும் கழற்றி வைத்த பூங்கொடி, ஊசி போடுவார் என நம்பி திரும்பி படுத்துள்ளார். ஆனால், வெகுநேரமாகியும் ஊசி போடப் படாததால், சந்தேகமடைந்த பூங்கொடி திரும்பி பார்த்து அதிர்ந்துள்ளார்.
காரணம் அறையில் டாக்டரும் இல்லை, பூங்கொடியின் நகைகளும் இல்லை. பூங்கொடியின் சத்தம் கேட்டு ஓடி வந்த அவரது அண்ணன் பழனிச்சாமி, நகைகளுடன் மாயமான போலி டாக்டரை மருத்துவமனை முழுவதும் தேடிப் பார்த்துள்ளார். ஆனால், குற்றவாளி பிடிபடவில்லை.
தகவலறிந்த காட்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும், மருத்துவமனையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வரும் போலீசார், விரைவில் நகைகளை திருடிய போலி டாக்டர் கைது செய்யப்படுவார் என தெரிவித்துள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications