கேளிக்கை வரி மூலம் தமிழ் சினிமாவுக்கு மணி மண்டபம் கட்டாதீர்... நடிகர் விஷால் வேண்டுகோள்
கேளிக்கை வரி மூலம் தமிழ் சினிமாவுக்கு மணி மண்டபம் கட்டி விட வேண்டாம் என்று நடிகர் விஷால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை: கேளிக்கை வரி மூலம் தமிழ் சினிமாவுக்கு மணி மண்டபம் கட்டி விட வேண்டாம் என்றும் கேளிக்கை வரியை செலுத்த இயலாது என்றும் நடிகர் விஷால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 64-ஆம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இன்று சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இதில், மூத்த மற்றும் முன்னணி திரைப்பட , நாடக நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து நடிகர் சங்க நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது விஷால் கூறுகையில், தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான அடுத்த தேர்தல் 2018 செப்டம்பரில் நடைபெறும்.
10% கேளிக்கை வரி தமிழகத்தில் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. ஆனால் தற்போது விதித்துள்ள 40 சதவீத கேளிக்கை வரியை எங்களால் செலுத்த முடியாது. 40 சதவீதம் வரியானது அரசே எடுத்துக் கொள்ளும். அத்தகைய சதவீதம் தயாரிப்பாளருக்கே கிடைக்காத நிலை உள்ளது.
கேளிக்கை வரி மூலம் தமிழ் சினிமா துறைக்கு மணி மண்டபம் கட்டாதீர். சிவாஜி சிலையில் கருணநிதியின் பெயரை இடம்பெற செய்ய வேண்டும். மலேசியாவில் ஜனவரியில் நடிகர், நடிகைகள் கலைநிகழ்ச்சி நிகழ்த்தப்படும். கேளிக்கை வரியை ரத்து செய்யக்கோரி முதல்வரை வரும் செவ்வாயன்று நிர்வாகிகள் சந்திக்கவுள்ளனர் என்றார் அவர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications