சென்னையில் மழைக்கு குட் பை சொல்லும் நேரம் வந்துவிட்டது... தமிழ்நாடு வெதர்மேன்!
சென்னையில் மழைக்கு குட் பை சொல்லும் நேரம் வந்துவிட்டதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: மழைக்கு குட் பை சொல்லும் நேரம் வந்துவிட்டதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியது முதலே வெளுத்து வாங்கி வருகிறது. சென்னை உட்பட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இதனால் தமிழகத்தில் உள்ள நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. சென்னையில் பெய்த மழையால் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

குட் பை சொல்லும் நேரம்
இந்நிலையில் சென்னையில் கடந்த 9 நாட்களாக பெய்து வந்த மழை இனி நீடிக்காது என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். சென்னையில் பெய்த மழை மற்றும் வங்கக்கடலில் உருவாகியிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலைக்கு குட் பை சொல்லும் நேரம் வந்துவிட்டதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

நல்ல வெயில் காயும்
சென்னையில் பெய்த மழை அதிகாலையுடன் நிறைவடைந்துவிட்டதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். வரும் நாட்களில் நல்ல வெயில் காயும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தென் தமிழகம், டெல்டா
தென் தமிழகம், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் இன்றுமழை பெய்யும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். கோவை, திருப்பூர், ஈரோடு நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.

புதிய காற்றழுத்தத்தை பொறுத்தே
இங்கும் நாளை முதல் மழை இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது நான்கிலிருந்து 5 நாட்கள் வடகிழக்குப் பருவமழை பிரேக் எடுக்கப்போவதாகவும் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை நகர்வை பொறுத்தே மீண்டும் மழை இருக்கும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications