மின் கட்டணத்துக்கு இன்று ஒருநாள் பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுக்கள் வாங்கப்படும் - மின்சார வாரியம்
இன்று ஒரு நாள் மட்டும் மின்சார கட்டணம் செலுத்த பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: மின்சார கட்டணம் செலுத்த வசதியாக இன்று ஒருநாள் மட்டும் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் வாங்கப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: பழைய செல்லாத ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மத்திய மற்றும் மாநில அரசின் நகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு செலுத்த வேண்டிய தொகை, கட்டணம், வரி மற்றும் அபராதம் ஆகியவற்றுக்கு ஏற்றுக்கொள்ளப்படும் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்த செல்லாத பழைய நோட்டுகளை நீர், மின் வசதி ஆகிய சேவைகள் தொடர்பான கட்டணங்களுக்கும் ஏற்றுக்கொள்ளப்படும். இந்த வசதி 11-ந் தேதி நள்ளிரவு வரை மட்டுமே என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மின்சார வாரிய மின் கட்டணங்களை பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை கொண்டு செலுத்தலாம்.
இந்த வசதி 11-ந் தேதி நள்ளிரவு (இன்று) வரை மட்டுமே பொருந்தும். மேலும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கட்டணம் செலுத்துவதற்கான காலநீட்டிப்பில் மாற்றம் இல்லை. அதே நேரத்தில் 11-ந் தேதிக்கு பிறகு இந்த பழைய நோட்டுகளை பயன்படுத்தக்கூடாது. 12-ந் தேதி முதல் செல்லத்தக்க ரூபாய் நோட்டுகளை கொண்டு தான் மின் கட்டணத்தை செலுத்த வேண்டும். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
கோவை கலெக்டர் ஆபீஸ் முன்பு ஷாக் சம்பவம்.. ரத்தவெள்ளத்தில் கிடந்த இளைஞர்.. பதுங்கியிருந்த 4 பேர் கைது -
Bakrid: பக்ரீத், வார இறுதிக்கு சொந்த ஊர் போறீங்களா.. போக்குவரத்துக் கழகத்தின் சூப்பர் அறிவிப்பு -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து?












Click it and Unblock the Notifications