சமூக வலைதளத்தில் பிரசாரம்: அ.தி.மு.க.வுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது கூறியதாவது:
சட்டமன்ற அலுவலகங்களை தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது என்று கண்டிப்புடன் கூறிய பிரவீண்குமார், பொதுக் கூட்டங்களில் பொதுமக்களுக்கு உணவு வழங்குவது தவறு என்றும், கட்சி கூட்டங்களில் உணவு வழங்கலாம் என்றும் தெரிவித்தார்.
சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம் செய்வது தொடர்பாக அதிமுகவிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் பிரவீண்குமார் தெரிவித்தார்.
தீ விபத்தால் பாதிக்கப்பட்ட எம்.கே.பி.நகர் மக்களுக்கு தற்போது தற்காலிக குடியிருப்பு வழங்கலாம் என்றும், நிரந்தர குடியிருப்பு வழங்க முடியாது என்றும், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். மேலும், ஏப்ரல் 22ஆம் தேதி மாலை வரை கருத்து கணிப்புகளை வெளியிடலாம்.
உரிய ஆவணங்கள் இன்றி பணம் எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்யப்படும் என்றும், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் கொண்டு சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
தமிழகத்தில் இதுவரை 2500 மிக்சி, 61 கிலோ வெள்ளி பொருட்கள், 7 கிலோ தங்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்படுள்ளது என்றும், பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் சுங்கத்துறையிடம் ஒப்படைக்கப்படும் என்றும் பிரவீண்குமார் கூறினார்.












Click it and Unblock the Notifications