Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிலுவம்பாளையத்தில் யாக பூஜை.. “ஏறுமுகம்”.. சொந்த ஊரில் குடும்பத்தினருடன் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமி!

Subscribe to Oneindia Tamil

சேலம் : எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு முதன்முறையாக தனது சொந்த கிராமமான சிலுவம்பாளையத்திற்குச் சென்றுள்ளார். அங்கு கோவிலில் நடைபெற்ற யாக பூஜையில் தனது குடும்பத்தினருடன் பங்கேற்றார் எடப்பாடி பழனிசாமி.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் அதிமுகவில் பிளவு ஏற்பட்டு எடப்பாடி பழனிசாமி ஒரு அணியாகவும், ஓ.பன்னீர்செல்வம் மற்றொரு அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர். பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டு எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும் இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் அடுத்தடுத்து வழக்கு தொடர்ந்த வண்ணம் இருந்தார்.

Edappadi Palaniswami along with his family participated in yaga puja held in siluvampalayam

பொதுச் செயலாளர் எடப்பாடி : இந்நிலையில் அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அடிப்படையில் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என அறிவிக்க கோரிக்கை விடுத்து தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி முறையிட்டிருந்தார். அதேபோல ஓபிஎஸ், பொதுச்செயலாளர் தேர்வு செல்லாது என அறிவிக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் முறையிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது அதிமுகவின் அதிகாரப்பூர்வ பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட அனைத்து தீர்மானங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் முடிவு அறிவித்ததை அடுத்து ஈபிஎஸ் தரப்பினர் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Edappadi Palaniswami along with his family participated in yaga puja held in siluvampalayam

டெல்லி செல்லும் ஈபிஎஸ் : அதிமுகவின் பொதுச்செயலாளர் என தேர்தல் ஆணையம் அங்கீகரித்த பின்னர், முதல் முறையாக எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி செல்கிறார். சென்னையிலில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்படும் அவர் பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவை சந்தித்துப் பேசவுள்ளார். பிரதமர் மோடியையும் எடப்பாடி பழனிசாமி சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

பாஜக மேலிடத் தலைவர்களின் கோரிக்கையை ஏற்று கர்நாடக மாநிலம், புலிகேசி நகர் தொகுதியிலிருந்து வேட்பாளரை அதிமுக திரும்பப் பெற்றுள்ளது. இந்நிலையில், அமித் ஷாவுடனான எடப்பாடி பழனிசாமியின் இந்த சந்திப்பு நாடாளுமன்ற கூட்டணியை உறுதிப்படுத்துவதோடு, மாநில அளவிலான பிரச்னைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edappadi Palaniswami along with his family participated in yaga puja held in siluvampalayam

சொந்த ஊரில் யாக பூஜை : இதற்கிடையே, அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு முதல் முறையாக தனது சொந்த ஊரான சிலுவம்பாளையத்திற்குச் சென்றார் எடப்பாடி பழனிசாமி. கடந்த முறை சென்றபோது நெடுஞ்சாலை நகர் வீட்டிலேயே தங்கி, கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுத் திரும்பிய நிலையில், இந்த முறை தேர்தல் ஆணையம் அங்கீகரித்த கையோடு சிலுவம்பாளையம் சென்றார் ஈபிஎஸ்.

சொந்த ஊருக்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு நூற்றுக்கணக்கான பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். சிலுவம்பாளையத்தில் உள்ள பெரிய மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழா எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற உள்ளது. அதையொட்டி, சிவாச்சாரியர்கள் நடத்திய யாக பூஜையில் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார் எடப்பாடி பழனிசாமி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+