திண்ணையில் தூங்கியவரை தூக்கி வீசிய யானை.. காயமடைந்தவருக்கு சிகிச்சை -ஈரோட்டில் பரபரப்பு
திண்ணையில் தூங்கிக் கொண்டிருந்தவரை யானை தூக்கி வீசியது. படுகாயம் அடைந்த நபர் ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு: அந்தியூர் பகுதியில் மக்கள் நடமாட்டம் இருக்கும் பகுதிகளில் அடிக்கடி யானைகள் வந்து செல்வது வழக்கம். அதனால் மக்கள் பீதியில் அந்தப் பகுதியில் வசித்து வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலை பகுதியில் பெசில்பாளையம் காரையூர் பகுதியை சேர்ந்தவர் ஈரண்ண கவுடர் மகன் மாதன். 55 வயதான இவர் வீட்டின் முன் உள்ள திண்ணையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக யானை ஒன்று வந்துள்ளது. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மாதனுக்கு இது தெரியாது. நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்த யானை அவரை அலேக்காக தூக்கி தூர வீசியது. இதில் அவருக்கு இடது கை, கால், மணிக்கட்டு ஆகிய பகுதிகளில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
படுகாயம் அடைந்த மாதன் அந்தியூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தூங்கிக் கொண்டிருந்த மாதனை யானை தூக்கி வீசிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications