செங்கோட்டை அருகே மீண்டும் யானைகள் விளை நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம்.. தென்னை, வாழை சேதம்
வடகரை பகுதியில் யானைகள் விளைநிலங்களை பாழ்படுத்தி வருகின்றன.
வடகரை: செங்கோட்டை அருகே உள்ள வடகரை பகுதியில் மீண்டும் யானைகள் விளை நிலங்களுக்குள் புகுந்து தென்னை, வாழை பலா மரங்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளை ஒட்டி வடகரை, பண்பொழி, மேக்கரை உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் அமைந்துள்ளது. இந்த பகுதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதிகளில் மா, தென்னை, பலா, வாழை போன்ற பயிர்களை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.

கோடை காலங்களில் இங்குள்ள யானை, சிறுத்தை காட்டுப்பன்றி, போன்ற வன விலங்குகள் தண்ணீருக்காகவும், உணவுக்காகவும் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசப்படுத்தி வருவது வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில் வடகரை அடவிநயினார் அணை, சென்னாபத்து , சின்னக்காடு போன்ற வன பகுதிகளில் வன விலங்குகள் புகுந்து வருகிறது. தற்போது மாங்காய் சீசன் தொடங்கி இருப்பதால் தோப்பிற்குள் வரும் யானைகள் மா மரத்தின் கிளைகளையும் ஏராளமான மாங்காய்களையும் தின்று அழித்து வருகிறது.

கடந்த சில தினங்களில் மட்டும் விவசாயி ஜாகீர் உசேன், முகமது கனி, அய்யப்பன் ஆகியோருக்கு சொந்தமான சுமார் 50க்கும் மேற்பட்ட தென்னை மரங்களையும், 150க்கும் மேற்பட்ட வாழை மரங்கள், 10க்கும் மேற்பட்ட பலா மரங்களையும் ஞாயிற்றுகிழமை இரவு சேதப்படுத்தியுள்ளது. இதனால் விவசாயிகள் விளை நிலங்களுக்குள் செல்வதற்கே பயப்படுகின்றனர்.

வனத்துறையினர் வனவிலங்குகளுக்கான உணவு மற்றும் தண்ணீரை விலங்குகள் வசிக்கும் பகுதிகளிலேயே கிடைத்திட தொட்டிகள் அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் அகழிகள் மற்றும் மின்சார வேலிகள் அமைத்து வனவிலங்குகள் விளை நிலங்களுக்குள் வராதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications