மதுரையில் பட்டபகலில் சுற்றிவளைக்கப்பட்ட ரவுடிகள்... போலீசின் சீக்ரெட் என்கவுண்டர் திட்ட பின்னணி!
மதுரை திண்டுக்கல் சாலையில் உள்ள சிக்கந்தர்சாவடியில் வீட்டில் பதுங்கி இருந்த ரவுடிகள் இருவரை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றுள்ளனர்.
Recommended Video

மதுரை : மதுரை சிக்கந்தர்சாவடி பகுதியில் குடியிருப்பு ஒன்றில் தங்கி இருந்த ரவுடிகளை போலீசார் பிடிக்கச் சென்ற போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் ரவுடிகள் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
மதுரை சிக்கந்தர் சாவடியில் உள்ள அடுக்குமாடி வீடு ஒன்றில் ரவுடிகள் பதுங்கி இருப்பதாகவும் அவர்கள் சதித்திட்டம் தீட்டி வருவதாகவும் மதுரை மாநகர போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து போலீசார் மஃப்டியில் அந்த பகுதியை நோட்டமிட்டுள்ளனர். இதனையடுத்து அங்கு ரவுடிகள் பதுங்கி இருப்பது உண்மைதான் என்பது உறுதிபடுத்தப்பட்ட பின்னர் அங்கு போலீஸ் படைகள் குவிக்கப்பட்டுள்ளன.

போலீஸ் குவிப்பு
போலீஸ் அதிக அளவில் குவிக்கப்பட்டதால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. குடியிருப்பு வாசிகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டு அவர்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தல் அளிக்கப்பட்டுள்ளது.

தற்காப்புக்காக என்கவுண்டர்
ரவுடிகளை பிடிப்பதற்காக காவல்துறையினர் வீட்டை நெருங்கியுள்ளனர். அப்போது சுதாரித்த ரவுடிகள் போலீசார் வருவதைக் கண்டு தங்களிடம் இருந்த துப்பாக்கியை வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் போலீசார் பதிலுக்கு சுட்டதில் ரவுடிகள் முத்து இருளாண்டி, சகுனி கார்த்தி இருவரும் உயிரிழந்தனர்.

19 கொலை வழக்குகள்
இவர்களுடன் இருந்த மற்றொரு ரவுடி தப்பியோடிவிட்டதாக தெரிகிறது. முத்து இருளாண்டி தொழிலதிபர்களை கடத்திச் சென்று மிரட்டி பணம் பறிப்பதையே தொழிலாக செய்து வந்ததாக கூறப்படுகிறது. இவர் மீது 19 கொலை வழக்குகள் உள்ளதாக தெரிகிறது.

மதுரையில் 5 ஆண்டுக்குப் பிறகு என்கவுண்டர்
இதே போன்று ரவுடி சகுனி கார்த்தி மீதும் பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளன. மதுரை மாநகரில் 5 ஆண்டுகளுக்கு முன்னர் என்கவுண்டர் நடந்துள்ளது, மனித உரிமைகள் ஆணையத்தின் எதிர்ப்பு காரணமாக இதுவரை என்கவுண்டர் நடக்கவில்லை, இந்நிலையில் பட்டபகலில் நடந்துள்ள இந்த என்கவுண்டர் மதுரை மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications