எந்த பகுதியையும் யார் வேண்டுமானாலும் ஆய்வு செய்யலாம்... கமல் விசிட் குறித்து அமைச்சர் ஜெயக்குமார்
ஜனநாயக நாட்டில் எந்த பகுதியையும் யார் வேண்டுமானாலும் ஆய்வு செய்யலாம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார்.
சென்னை: ஜனநாயக நாட்டில் எந்தப் பகுதியையும் யார் வேண்டுமானாலும் ஆய்வு செய்யலாம், யார் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்று துறைமுகத்தை கமல் பார்வையிட்டது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
கொசஸ்தலை ஆற்றில் வல்லூர் அனல்மின் நிலையத்தின் சாம்பல் கழிவுகள் கொட்டப்படுவதால் வடசென்னைக்கு ஆபத்து என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து நடிகர் கமலும் தனது டுவிட்டர் பக்கத்தில் வடசென்னைக்கு ஆபத்து என்று பதிவிட்டிருந்தார். இந்நிலையில் கமல் நேரடியாக களத்தில் இறங்கினார்.
Recommended Video


சாம்பல் கழிவுகளை ஆய்வு
இன்று அதிகாலை 5 மணிக்கு எண்ணூர் துறைமுக கழிமுகப் பகுதிக்கு சென்று அனல்மின் நிலையத்தின் சாம்பல் கழிவுகளை பார்வையிட்டார். பின்னர் அங்கிருந்த மக்களிடமும் குறைகளை கேட்டறிந்தார்.

ஆட்சியர் உறுதி
இதனையடுத்து திருவள்ளூர் ஆட்சியர் சுந்தரவல்லியும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் நடிகர் கமலின் கருத்துக்கு அவ்வப்போது சுட சுட பதில் அளித்து வந்தவர் அமைச்சர் ஜெயக்குமார். அவரிடம் கமல் ஆய்வு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

எங்கு வேண்டுமானாலும்
இதற்கு பதிலளித்த அமைச்சர், ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் சென்று ஆய்வு செய்யலாம். அரசியல் கருத்துகளுக்கு மட்டுமே பதிலடி கொடுக்க வேண்டும். எல்லாவற்றுக்கு கொடுக்க முடியாது.

முகத்துவாரங்கள் தூர்வாரப்படும்
முகத்துவாரங்கள் சில மீன்களுக்கு மகப்பேறு மருத்துவமனைகளாக உள்ளன. மேலும் அப்பகுதிகளுக்கு வரும் மீன்கள் குஞ்சு பொரித்துவிட்டு பின்னர் கடலுக்குள் சென்றுவிடும். எனினும் முகத்துவார பகுதிகள் விரைவில் தூர்வாரப்படும் என்றார் ஜெயக்குமார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications