இந்தியாவிலும் மரணதண்டனை ஒழிக்கப்படவேண்டும்... ஐரோப்பிய நாடுகளின் தூதரக அதிகாரிகள் வலியுறுத்தல்
சென்னை: ஐரோப்பிய நாடுகளில் மரண தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மரண தண்டனைக்கு எதிராக கருணாநிதி குரல் கொடுத்ததால் அவரிடம் ஆதரவு கேட்டு வந்தோம் என்று ஐரோப்பிய நாடுகளின் தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பின் தூதர் தலைமையில் 10 நாடுகளின் பிரதிநிதிகள் திமுக தலைவர் கருணாநிதியை சி.ஐ.டி காலனி இல்லத்தில் சந்தித்து பேசினர்.
இந்த சந்திப்பின்போது, இலங்கைத் தமிழர் பிரச்னையில் பன்னாட்டு நீதி விசாரணை குறித்த நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.

மேலும், ஐரோப்பிய நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டிருப்பதைப் போல இந்தியாவிலும், அந்த தண்டனைக்கு தடை விதிக்க இந்த சந்திப்பின் போது வலியுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், இந்தியாவில் மரண தண்டனைக்கு எதிராக கருணாநிதி குரல் கொடுத்ததால் அவரிடம் ஆதரவு கேட்டு வந்தோம் என்று கூறினர்.
மேலும், தமிழகத்தில் தொழில்வளர்ச்சி, மத்திய-மாநில அரசிற்கும் இடையே உள்ள உறவு குறித்தும், இலங்கை-இந்தியா உடனான உறவு குறித்தும் கருணாநிதியிடம் கேட்டறிந்தோம். அடுத்தாக தமிழக முதல்வர், ஆளுநரை சந்திக்க உள்ளோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
வைகோ உடன் சந்திப்பு
இதனிடையே ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதர் குழுவை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின் போது, இலங்கையில் வெளிப்படையான பன்னாட்டு நீதி விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த குழுவிடம் வைகோ வலியுறுத்தினார்.

தமிழக அரசியல் நிலை குறித்தும், இலங்கையில் தமிழீழ மக்கள் சந்தித்து வரும் பிரச்னைகள் குறித்தும் இந்த சந்திப்பின்போது ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 11ஆம் தேதி வரை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதர் குழு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இந்தியாவுடனான ஐரோப்பிய நாடுகளின் உறவை வலுப்படுத்துவதற்காக, இந்த குழுவினர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இந்தியாவுடனான ஐரோப்பிய நாடுகளின் உறவை வலுப்படுத்துவதற்காக, ஓவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த குழுவினர் சுற்றுப்பயணம் நடத்த திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications