காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு - ஒகேனக்கல் விவசாயிகள் பேரணி
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா அரசு 6,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதை கண்டித்து ஒகேனக்கல்லில் ஏராளமான விவசாயிகள் பேரணியாக சென்றனர்.
கிருஷ்ணகிரி: காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா மாநில அரசு, 6,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதை கண்டித்தும் இத்திட்டத்தை கைவிடக்கோரியும், ஒகேனக்கலில் பேருந்து நிலையத்தில் இருந்து விவசாயிகள் முதலைப்பண்ணை வரை பேரணியாக சென்று போராட்டம் நடத்தினர்.
காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. கர்நாடக அரசு புதிய அணை கட்டினால் தமிழகத்தில் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்காது என்றும் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்பது விவசாயிகள், சமூக ஆர்வலர்களின் கவலையாகும்.

உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல், கர்நாடகா அரசு, காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட மறுக்கிறது. விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே, மேகதாதுவில் அணை கட்ட அம்மாநில அரசு 6 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இது தமிழக விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமைய்யா, மேகதாதுவில் அணை கட்டும் விவகாரத்தில் தமிழக அரசு தேவையில்லாமல் அரசியல் செய்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

அணை கட்டும் திட்டத்தை செயல்படுத்துவதில் தங்களுக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை என்று கூறிய அவர், கர்நாடகத்திற்கு சட்ட ரீதியாகவும், தொழிற் நுட்ப ரீதியாகவும் அணை கட்ட முழு உரிமை உள்ளது என்று கூறினார். கர்நாடக எல்லைக்குள் அணை கட்டும் திட்டத்தை நிறைவேற்றுவதால் யாரிடமும் அனுமதி வாங்க வேண்டிய தேவையில்லை
இதனைக் கண்டித்தும், மத்திய அரசு இத்திட்டத்திற்கு அனுமதி தரக்கூடாது என்று வலியுறுத்தியும் ஒகேனக்கலில் பேருந்து நிலையத்தில் இருந்து விவசாயிகள் முதலைப்பண்ணை வரை பேரணியாக சென்று போராட்டம் நடத்தினர். அணை கட்டும் திட்டத்திற்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications